December 2018




(வஸீம் ஹூஸைன்)

தென்னிலங்கை மாத்தறை மாவட்ட வெலிகமையைச் சேர்ந்த மௌலவி அஹ்மத் அப்பாஸி ஹதீஸ் துறையில் முதுமானிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

ஸஊதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இமாம் முஹம்மத் இப்னு ஸூஊத் இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் இன்று அவரது ஆய்வறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வெலிமக எ. ஜ. முஹம்மத், யும்னா ஆகியோரின் புதல்வரான இவர் தனது ஆரம்ப கல்வியை வெலிகம அறபா கனிஷ்ட வித்தியாலயத்தில் கற்றார். அதன் பின்னர் மார்க்க கல்வியை கற்க வேண்டும் என நோக்கில் காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியில் சேர்ந்து இஸ்லாமிய கற்கைகளை முறையாக கற்றார். 

வெலிகமையை சேர்ந்த மௌலவி பத்ஹூர் ரஹ்மான் அவர்களின் மருமகனான இவர் தனது மார்க்க அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள அல் இமாம் பல்கலைக் கழகத்திற்கு 2005 ம் ஆண்டளவில் நுழைந்தார்.

இங்கு அரபு போதனாசிரியர் கற்கை நெறியில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்து, மார்க்க அடிப்படை பிரிவில் தனது கலைமாணி கற்கை நெறியையும் பூர்த்தி செய்தார். மார்க்க அடிப்படைப்பிரிவில் ஹதீஸ் துறையில் சிறப்புச் சித்தி பெற்ற இவர்கள் 2011 ம் ஆண்டு தனது முதுமாணி கற்கை நெறியை அதே துறையில் தொடர்ந்தார்.

மிகச் சிறந்த நற்குணமும், அளவிற்கே அதிகமான பொறுமையும், மிகச் சிறந்த மார்க்க அறிவும் கொண்டவரான இவர்கள் ஹதீஸ் துறையில் " நூஹ் நபி அவர்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் " என்ற தலைப்பில் சுமார் 600 பக்கங்களை கொண்ட ஆய்வு நூலை சமர்ப்பித்து இன்று அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இமாம் பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் துறை விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் கலாநிதி பஹ்த் அல் ஆமிர் அவர்களது மேற்பார்வையில் செய்யப்பட்ட இந் நூலை பேராசிரியர் அலி ஸப்ன், கலாநிதி ஸயீத் ஸமாஹா ஆகியோரால் விவாதத்திற்கு உப்படுத்தி, இந்த நூலுக்கு விஷேட திறமைச் சித்தியில் முதல் தரத்தை பெறுபேறாக வழங்கினர்.

இதன் போது உரையாற்றிய அவர்கள் " எமது மாணவன் அஹ்மத் இப்னு முஹம்மத் ஜமால்தீன் எழுதிய " நூஹ் நபி அவர்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் " என்ற இந்நூல் சமகாலத்திற்கு அவசியம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. நூஹ் நபி தொடர்பாக வந்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களையும், ழஈபான ஹதீஸ்களையும், மவ்ழுஃ வான ஹதீஸ்களையும் அதன் தரத்தை உரசி மிக அழகான முறையில் தொகுத்துள்ளார். நூஹ் நபி தொடர்பான ஒட்டு மொத்த செய்திகளையும் தொகுத்து ஆய்வு செய்த இவரின் முன்னெடுப்பு அளப்பரியது. இதன் மூலம் இஸ்லாமிய சமூகம் பெரிய அளவிலான பிரயோசனங்களை பெறுவதில் ஐயமில்லை " என குறிப்பிட்டார்கள்.

அஹ்மத் அப்பாஸி அவர்கள் சிறந்த ஆளுமை மிக்க ஒருவர். எமது பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் பல உப குழுக்களுக்கு தலைமை தாங்கியவர். குறிப்பாக எமது வெளியீடான இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டி நூலின் நூலாக்க குழுத் தலைவரும் கூட. அயராத அறிவுத் தேடல் இன்று அவரை உச்சம் தொட வைத்துள்ளது.
யா அல்லாஹ் அவரது அறிவுத் தேடலில் வெற்றியை ஏற்படுத்துவாயாக! அவரது குடும்ப வாழ்வு, பெற்றோர், மனைவி, பிள்ளை , பொருளாதாரம் போன்றவைகளில் பரகத்தை ஏற்படுத்துவாயாக! அவர் கற்ற கல்வியை சமூதாயத்திற்கு பயனளிக்க கூடியதாக ஆக்குவாயாக! சமூகத்திற்கு பயன் கிடைக்கும் வகையில் அவரது மார்க்க அறிவை அனைத்து முறைகளிலும் பரப்புவதற்குரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவாயாக!

எமது பல்கலைக்கழக மாணவர் அஹ்மத் அப்பாஸி எம்.ஏ அவர்களுக்கு எமது இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.








(9) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ் ஓர் அடியானின் குறைகளை இவ்வுலகில் மறைத்துவிட்டால் அதனை அவன் மறுமையிலும் மறைக்காமல் இருப்பதில்லை".

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).  ஆதாரம் : முஸ்லிம் : 2590 

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்த அருளிலுள்ளது தான், அடியார்கள் செய்யும் தவறுகளை, அவர்கள் பாவமீட்சி பெறுவதற்காக, அவர்களை இழிவாக்காமல் மறைத்து விடுகிறான். பின்னர் (அவர்கள் பாவமீட்சி பெறும்போது) அவர்களுடைய பாவமீட்சியை ஏற்று அவர்களை மன்னித்துவிடுகிறான்.

(2) அடியார்களுடைய பாவங்களுக்காக அல்லாஹ் அவர்களுக்கு தண்டனை வழங்காமல் அவர்களுடைய பாவங்களை மறைத்து, அவர்களுக்கு உபகாரம் செய்ததால் அவனுக்கு நன்றி செலுத்துவது அடியார்கள் மீது கடமையாகும்.

(3) பாவங்களில் மூழ்கியிருந்து (அதற்கான தண்டனை கிடைக்காததையிட்டு) மார்க்கத்தை கேவலப்படுத்தக்கூடாது.

(8) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இத்தகைய குதிக்கால்களை நரகம் தீண்டட்டும்". 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : புஹாரி : 163, முஸ்லிம் : 242 (இவ்வார்தை முஸ்லிமில் இருந்து)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) தண்ணீர் அனைத்து உறுப்புக்களிலும் போய்ச்சேரும் விதத்தில், வுழூவைப் பரிபூரணமாகச் செய்வதில் கவனமெடுக்க வேண்டும்.

(2) (வுழூவில்) கட்டாயம் கழுவவேண்டிய பகுதியில் ஒரு சிறு பகுதியேனும் விடுபட்டால் அவருடைய வுழூ கூடாது.

(3) வணக்க விடயங்களில் கவனயீனமாக இருப்பதும், (அதில்) குறைவைப்பதும் அழிவுக்கும் நட்டத்திற்கும் காரணமாக அமையும்.

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget