பிரதான செய்திகள்




 

 



ரவ்ழதுல் இல்ம் - 2023 போட்டியின் இறுதிப்பரீட்சைக்குரிய  Google form இனை பெற்றுக் கொள்ள மேலே உள்ள படத்தை Click செய்யுங்கள்.

 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ


🎤🎤 ரவ்ழதுல் இல்ம் – 2023  பரீட்சையில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கான  அறிவுறுத்தல்கள்.

01.    பரீட்சையில் கலந்து கொள்பவர் கட்டாயம் 14 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

02.    முதல் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களுக்கு மிகத் தெளிவாக பதில்களை வழங்க வேண்டும். தங்களால் ஏற்படும் தவறுகளுக்கு போட்டிக் குழு பொறுப்பாகமாட்டாது.

03.    போட்டியில் கலந்து கொள்பவர் கூகுள் போமினை  திறக்கும்  போது பயன்படுத்தும்  கைத்தொலைபேசி அல்லது கணணியில் ஈமெயில் கட்டாயம்  திறந்திருக்க வேண்டும்.  ஒரு ஈமெயில் மூலமாக ஒருவர் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். ஈமெயில் திறக்கப்பட்டிராத டிவைஸில்  பரீட்சையில் பங்குபற்ற முடியாமல் போகலாம்.

04.    பரீட்சைக்கான  கூகுள் போம் ஜூலை  31 திங்கள்  காலை 06.00 முதல்  ஓகஸ்ட் 01 செய்வாய் நள்ளிரவு 12.00 மணி வரை விடையளிப்பதற்காக திறந்திருக்கும். அதற்குப் பின்னால் விடையளிக்க முடியாது.

05.    நீங்கள் அளித்த பதில்களுக்கான புள்ளிகள்  செவ்வாய் நள்ளிரவு 12.00 பின்னரே கூகுள் போமில் காண்பிக்கப்படும்.

06.    சான்றிதழ்கள் யாவும் ஈமெயிலுக்கே அனுப்படும் என்பதால்  ஈமெயிலை சரியாக குறிப்பிடவும்.

07.    வெற்றியாளர்கள் விபரம் எங்களது இணையத்தளத்திலும், முகநூலிலும் வெளியிடப்படும்.


 

இன்றோடு எமது போட்டிற்கான அனைத்து பாடங்களும் நிறைவிற்கு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் பரீட்சைகள் இடம் பெறும். அது பற்றிய முழு விபரங்களையும் இன்றைய நாளில் வெளியிடுவோம்!.

அகீதா பாடத்தினுடைய முழு  pdf

https://drive.google.com/file/d/1Egkk9cWFU5P4-gfZK5oGdV-sQu_DdrLe/view?usp=drive_link

பிக்ஹ் பாடத்தினுடைய முழு  pdf


https://drive.google.com/file/d/1EkSOZCzZD-09LDJ14MD-kuQfyabiOO_0/view?usp=drive_link



 

வுழூவிற்கான சுன்னத் தொழுகை

உஸ்மான் ன அவர்களின் பணியாளர் ஹூம்ரான் அவர்கள் கூறிப்பிடுகிறார்கள் : 'உஸ்மான் ன அவர்கள் ஒரு பாத்திரத்தில் நீரை கொண்டு வருமாறு கூறினார்கள். பின்னர் மூன்று முறை  இரண்டு மணிக்கட்டுகளின் மீது ஊற்றி கழுவினார்கள். பின்னர் தனது வலதுகையை பாத்திரத்தில் இட்டு (நீரை எடுத்து) வாய்க்கு கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பின்னர் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு இரண்டு கரங்களையும் முழுங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை மஸ்ஹ் செய்தார்கள். பின்னர் கரண்டை வரை இரு கால்களையும் கழுவினார்கள். பின்னர் 'யார் இது போன்று வுழூ செய்து பின்னர் எவ்வித உலக எண்ணங்களும் இல்லாமல் இரண்டு ரக்ஆத்கள் தொழுகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஎன நபியவர்கள் கூறியதாக கூறினார்கள். (ஆதாரம் - புஹாரி : 159)

 

பெருநாள் தொழுகை

            பெருநாள் தொழுகை அல்குர்ஆன், ஸூன்னா, இஜ்மா மூலம் மார்க்கமாக்கப்பட்டுள்ளது. இணைவைப்பாளர்கள் காலத்திற்கு  என்றும் இடத்திற்கு என்றும் பெருநாட்களை கொண்டாடக் கூடியவர்களாக இருந்தனர், இஸ்லாம் அவைகளை இல்லாமல் செய்து அவைகளுக்கு பகரமாக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய  இரண்டு பெருநாள் தினங்களை ஏற்படுத்தியது.

 

முஸ்லிம்களின் பெருநாள் தினங்கள் இரண்டாகும். அவை :

ஈதுல் பித்ர் (நோன்புப் பொருநாள்) : இது ஷவ்வால் மாத முதல் நாள் கொண்டாடப்படும்.

ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) : இது துல்ஹஜ் மாத பத்தாவது நாள் கொண்டாடப்படும்.

 

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

சூரியன் உதித்து ஒரு ஈட்டி அளவு (15 நிமிடம்) உயர்ந்ததிலிருந்து சூரியன் அதன் உச்சியை அடையும் வரை இதன் நேரம் துவங்குகிறது.

தொழுகை : இரண்டு ரக்அத்கள். இரண்டிலும் சத்தமாக ஓத வேண்டும். மேலும் அதான், இகாமத் இன்றி நிறைவேற்றப்படும். முதல் ரக்அத்தில் தக்பீரதுல் இஹ்ராமை தவிர்ந்து ஆறு தக்பீர்களும், இரண்டாவது ரக்ஆதில் நிலைக்கு வரும் தக்பீரைத் தவிர்ந்து ஐந்து தக்பீர்களும் சொல்லப்படும்.

குத்பா : (பிரசங்கம்) தொழுகைக்குப் பின் நிறைவேற்றப்படும்.    

 

பெருநாள் தினத்தில் செய்ய வேண்டிய விரும்பத்தக்க செயல்கள்

1.குளித்தல், சிறந்த ஆடைகளை அணிதல்.

2.நோன்புப் பெருநாள்; தினமன்று சில பேரீத்த பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிட்டு விட்டு தொழுகைக்கு செல்லுதல் சுன்னத்தாகும். ஹஜ்ஜூப் பொருநாள் தினத்தில் தொழுகைக்கு பின்னர் சாப்பிடுவது சிறந்ததாகும்.

3.திடலில் தொழுவது நபி வழியாகும். மேலும் தொழுகைக்குப் போன வழியில் அல்லாது வேறு வழியில் திரும்பி வருவதும், சுன்னதாகும்.

4.தக்பீர் சொல்வது விரும்பத்தக்கதாகும்.

الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ألله أكبر ولله الحمد

குறிப்பு : கூட்டாக தக்பீர் சொல்லல் கூடாது.

5.பெருநாள் தினங்களில் நோன்பு நோற்பது ஹறாமாகும். அதே போன்று அய்யாமு தஷ்ரீக்குடைய (துல்ஹஜ் பிறை 11,12,13) நாட்களிலும் நோன்பு நோற்பது ஹறாமாகும்.

6.ஹஜ் பெருநாள் தினத்தில் உழுஹிய்யா கொடுத்தல்.

 

கிரகணத் தொழுகை

            இது சூரிய, சந்திரக் கிரகணங்களின் போது தொழப்படும் தொழுகையாகும். கிரகணம் ஆரம்பித்ததிலிருந்து அது நீங்கும் வரை உள்ள நேரத்தில் இத்தொழுகை நிறைவேற்றப்படல் வேண்டும். அதற்குப் பின்னால் அதனை 'கழா'ச் செய்து தொழப்படமாட்டாது. மக்கள் அறிவதற்கு முன் கிரகணம் நிகழ்ந்து முடிந்து விட்டால் அதற்காக தொழுவிக்கப்படவும் மாட்டாது.

 

தொழும் முறை

            இது இரண்டு ரக்அத்துக்களாக தொழப்படும். முதலாம் ரக்அத்தில் சூறதுல் ஃபாதிஹாவுடன் நீண்ட ஏதாவது ஒரு சூறா ஓதப்படும். பின்பு நீண்ட நேரம் ருக்கூவிலிருந்து, 'ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்த்' எனக்கூறி நிலைக்கு வந்து, மீண்டும் சூறத்துல் ஃபாதிஹாவுடன் இன்னுமொரு நீண்ட சூறாவை ஓதி, ருக்கூவிற்குச் சென்று அதிலே நீண்ட நேரம் தாமதித்து, பின் 'ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அமாஷிஃத மின் ஷைஇன் பஃத்' எனக்கூறி நிலைக்கு வந்து, அதிலே அதிக நேரம் தாமதித்து, பின்பு நீண்ட இரண்டு ஸுஜூதுகளையும்,அதற்கு மத்தியிலுள்ள இருப்பிலும் நீண்ட நேரம் தாமதித்து, இரு ஸுஜூதுகளிலும் அதிக நேரம் துஆவில் ஈடுபட்ட பின்பு, இரண்டாம் ரக்அத்திற்காக நிலைக்கு வரவேண்டும். முதலாம் ரக்அத்தில் இரண்டு ருகூஃக்கள், இரண்டு ஸுஜுதுகள்    செய்ததைப் போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்துவிட்டு, அத்தஹிய்யாத் ஓதி, ஸலாம் கொடுக்க வேண்டும்.

           

            கிரகணம் முடிவதற்கு முன்பு தொழுது முடிந்தால் நீண்ட நேரம் துஆவிலும், திக்ர்களிலும் ஈடுபடுவாரே ஒளிய மீண்டும் தொழவேண்டிய தேவை இல்லை. தொழும் போது கிரகணம் முடிந்துவிட்டால் தொழுகையை இலேசாகச் சுருக்கி முடித்துக் கொள்ள வேண்டும்.

 

மழைவேண்டித் தொழும் தொழுகை

            அல்லாஹ்விடத்தில் தொழுகையின் மூலம் மழையை வேண்டுவது ஒரு வணக்கமாகும். வரட்சி ஏற்பட்டு, மழை பொழியாவிடின் இத்தொழுகையை நிறைவேற்றுவது சுன்னதாகும்.

 

தொழும் முறை

            இது பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துக்களாக நிறைவேற்றப்படும். ஒரு முஸ்லிம் ஜமாத்தாகத் தொழுது, அல்லாஹ்விடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கலாம். அல்லது ஜும்ஆப் பிரசங்கத்தில் துஆ கேட்கலாம். அல்லது தொழுகையோ, பிரசங்கமோ இன்றி  துஆக் கேட்கலாம்.

 

            துஆவின் இறுதியில் கிப்லாவை முன்னோக்கி அவரின் போர்வையை வலது புறத்தை இடதாகவும் இடது புறத்தை வாலதாகவும் திருப்புவது சுன்னத் ஆகும்.

 

அப்துல்லாஹ் இப்னு ஸைத் ன அறிவித்தார்கள். நபி ள அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். (ஆதாரம் - புஹாரி : 960)   

 

            இதன் போது மனிதர்களுக்கு பாவமன்னிப்பு தேடுமாறும், பாவங்களிலிருந்து தவிர்ந்து நடக்குமாறும் இமாம் உபதேசம் செய்வார்.

 

நபி ள அவர்கள் மழையைக் காணும்போது :  (اللّهُمَّ صَيِّباً نَافِعاً) பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள். (ஆதாரம் - புஹாரி : 1032)

 

 

பெரு மழையால் பாதைகள் துண்டிக்கப்பட்டால் பிரார்த்திப்பது

            ஒருவர் நபி ள அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி ள அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி ள அவர்கள்

اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا اللَّهُمَّ عَلَى رُءُوسِ الجِبَالِ وَالآكَامِ، وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ»، فَانْجَابَتْ عَنِ المَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ

பொருள் : 'யா அல்லாஹ் இம் மழையை எமக்கு பாதகமில்லாமல் சாதகமாக ஆக்குவாயாக, இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது'. (ஆதாரம் - புஹாரி : 1017)

 

 

'அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! இன்ஷா அல்லாஹ் எமது வாழ்வியல் வழிகாட்டி 'முன்றாம் தரத்தில்' அடுத்த விடயங்களை கற்போம்'

 

 

- முற்றும் -


 


ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும் சட்டமும்

அல்லாஹ் கூறுகிறான் : 'தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 02 : 43)

 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ன கூறினார்கள் : 'யார் மறுமை நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றட்டும். அல்லாஹ் உமது நபிக்கு நேர்வழிகளை காட்டியிருக்கிறான். தொழுகையை உரிய நேரத்தில் தொழுவது அவன் காட்டிய வழிகளில் ஒன்றாகும். பள்ளிக்கு பிந்துபவர் வீட்டில் தொழுவதை போன்று நீங்களும் வீட்டில் தொழுதால் உமது நபியின் வழிமுறையை தவறவிட்டவராகி விடுவீர். எவர் நல்ல முறையில் சுத்தமாகி பள்ளிக்கு சென்றால் அவருடைய ஒவ்வொரு எட்டிற்கும் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மை வழங்கி, அவரது அந்தஸ்தை உயர்த்தி, பாவத்தையும் மன்னிக்கிறான். முனாபிக் என அறியப்பட்டவர்களை தவிர வேறு எவரும் ஜமாஅத் தொழுகைக்கு பிந்தமாட்டார்கள்';  (ஆதாரம் - முஸ்லிம் : 654)

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'ஜமாஅத்தாக தொழுவது தனித்து தொழுவதை விட இருபத்தி ஏழு மடங்கு நன்மை தரக் கூடியது'. (ஆதாரம் - புஹாரி : 645, முஸ்லிம் : 650)

 

ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            தொழுகையை ஜமாஅத்துடன் பள்ளிவாயலில் தொழுவது கட்டாயக் கடமையாகும்.

நபி ள அவர்களிடம் ஒரு பார்வையற்றவர் வந்து யாரசூலல்லாஹ் என்னை பள்ளிவாயலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. அதனால் நான் வீட்டில் தொழலாமா? என கேட்டார். அதற்கு நபி ள அவர்கள் உமக்கு அதான் கேட்கிறதா? என கேட்க அம்மனிதர் ஆம் என்றார். அப்போது நபியவர்கள் அதற்கு நீர் பதிலளிப்பீராக (பள்ளிக்கு வருவீராக) என்றார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 653)

 

பெண்களுக்கான ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது கூடாது. அவர்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே மிகச் சிறந்ததாகும்.

 

ஜமாஅத் தொழுகையை விட்டும் பிந்துபவர்களுக்கான சட்டம்

ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துபவர்கள் இரு கூட்டத்தினர்

முதல் கூட்டத்தினர்: மிகக் கடுமையான நோய், உயிராபத்து போன்ற ஏதாவது காரணத்திற்காக  ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள். இவர்கள் தனித்து தொழுதால் ஜமாஅத் உடன் தொழுத நன்மையை பெற்றுக் கொள்வார்கள்.

இரண்டாம் கூட்டத்தினர்: எவ்வித காரணமும் இன்றி ஜமாஅத் தொழுகையை விடுபவர்கள். இவர்கள் ஒரு வாஜிபை விட்ட குற்றத்திற்கு ஆளாகின்றனர்.

 

மஃமூமுடன் (பின்பற்றித் தொழுபவர்) தொடர்புடைய சில சட்டங்கள்

பின்பற்றித் தொழுபவர் ஒரு போதும் இமாமை முந்தக்கூடாது. (இமாம் ருகூஃ செய்யாமல் ருகூஃ செய்யக் கூடாது, இமாம் ஸுஜூது செய்யாமல் ஸுஜூது செய்யக் கூடாது.)

இமாம் ருகூஃவிலிருந்து எழுமுன் மஃமூம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார். அவ்வாறில்லாத பட்சத்தில் அடுத்த ரக்அத்துக்காக இமாம் எழும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அதில் போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அது ருகூஃ அல்லது அதற்கு முன் என்றால் அது ஒரு ரக்அத்தாக கணிக்கப்படும். இல்லாவிடில் கணிக்கப்படமாட்டாது.

 

சுன்னத்தான தொழுகைகள்

சுன்னத்தான  தொழுகையின் சிறப்பு

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'மறுமை நாளில் மனிதனுடைய அமல்களில் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றியாகும். தொழுகை சீராக இருந்தால் அவன் வெற்றி பெற்று விட்டான், தொழுகை சீராக அமைய வில்லை என்றால் அவன் நஷ்டமடைந்து விட்டான். அவனுடைய (பர்ழ்) தொழுகையில் குறைபாடு இருந்தால், என்னுடைய அடியானின் சுன்னத்தான தொழுகையைப் பாருங்கள் அதைக் கொண்டு குறைப்பாட்டை நிரப்புங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்' (ஆதாரம் - திர்மிதி : 413)

 

பர்ளான தொழுகைகளின் முன் பின் சுன்னத்துக்கள்

            பர்ளான தொழுகையில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அல்லாஹ் சுன்னத்தாக தொழுகைகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளான்.

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'யார் ஒரு நாளில் 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்' (ஆதாரம் - முஸ்லிம் : 728)

 


            இவ்வாறான சுன்னத்தான தொழுகைகளை பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது சிறந்ததாகும்.

 

குறிப்பு : வலியுறுத்தப்பட்ட சுன்னத், வலியுறுத்தப்படாத சுன்னத் ஆகிய இரண்டையும் சேர்ந்து தொழுவது சிறந்ததாகும்.

 

இராத் தொழுகை

1.         இரவுத் தொழுகை இரண்டு இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

2.         இத் தொழுகையை இஷாவிற்குப் பிறகு பஜ்ர் தொழுகை வரை இரவில் இறுதிப் பகுதியில் தொழுவது சிறந்ததாகும்.

3.         சில நேரங்களில் நபி ள அவர்கள் கூடுதலாக, குறைவான எண்ணிக்கைகளில் தொழுவார்கள்.

4.         இத்தொழுகையில் நிலை, ருகூஃ, ஸுஜூது ஆகியவற்றை நீட்டித் தொழுவது சிறந்தது.

5.         கடைசி மூன்று ரக்அத்களில் பின்வரும் சூராக்களான அஃலா, காபிரூன்,           இஃலாஸ் போன்றவற்றை ஓதுவது ஸுன்னத்தாகும்.

 

குறிப்பு :

            இரவுத் தொழுகை பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அவை கியாமுலைல், தஹஜ்ஜத், தராவீஹ், வித்ர் என்பனவாகும்.

 

லுஹா தொழுகை

சூரியன் உதயமாகி 15 நிமிடங்கள் கழித்து சூரியன் நடு உச்சிக்கு வரும் வரை இதனுடைய நேரமாகும்.

இரண்டு முதல் எட்டு ரக்அத்கள் வரை தொழ அனுமதி உண்டு.

 

அபூ ஹூரைரா ன அவர்கள் கூறினார்கள் : 'நபியவர்கள் எனக்கு மூன்று விடங்களை உபதேசமாக சொன்னார்கள். நான் மரணிக்கும் வரையில் அவற்றை விடமாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு நோற்பது, லுஹா தொழுகையை நிறைவேற்றுவது, தூக்கத்திற்கு முன்னால் வித்ரு தொழுகையை நிறைவேற்றுவது'  (ஆதாரம் - புஹாரி : 1178, முஸ்லிம் : 721)

 

தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக் காணிக்கை தொழுகை)

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் எவர் பள்ளிக்குள் நுழைகிறாரோ அவர் இரண்டு ரக்ஆத்துகள் தொழும் வரை பள்ளியில் அமர வேண்டாம்' (ஆதாரம் - புஹாரி : 444, முஸ்லிம் : 714)

 

 

இஸ்திஹாரா தொழுகை

            இது அல்லாஹ்விடம் உதவி வேண்டி நிறைவேற்றும் தொழுகையாகும்.

இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

அதன் பின் அவர் நாடிய விடயங்களை இறைவனிடம் பிரார்த்திப்பார்.

அதில் பின்வரும் துஆவை ஓதுவது சிறந்தது

 

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي.

பொருள் : 'இறைவா! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனது வல்லமையை கொண்டு உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். உன்னால் முடியும் என்னால் முடியாது. நீ அனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். நீ மறைவான விடயங்களை அறிகிறாய். இறைiவா! என்னுடைய இந்தக் காரியம் (தன் தேவையை இந்த இடத்தில் குறிப்பிடுவார்) என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா, அதை எனக்கு இலகுபடுத்திக் கொடு, பின்பு அதில் எனக்கு பரக்கத் செய். இந்தக் காரியம் (தன் தேவையை இந்த இடத்தில் குறிப்பிடுவார்) என்னுடைய மார்க்கத்திற்கும், என்னுடைய வாழ்க்கைக்கும், என்னுடைய மறுமைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும், இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா, பின்பு அதில் திருப்தியைத் தா.

 



10. பஜ்ர், ஜும்ஆ, பெருநாள் போன்ற இரண்டு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகையாக இருந்தால் இரண்டாவது                 ஸஜ்தாவிற்குப் பின்னால் தனது வலது காலை நாட்டி இடது காலை விரித்து அதன் மீது உட்கார்ந்து, இரு கைகளையும் தனது தொடைகளிலும் முட்டுக்கால்களிலும் படுமாறு வைத்துக் கொள்வார்.

 

            மூன்று அல்லது நான்கு ரக்ஆத் தொழுகையை முடித்துக்கொள்ளும் அமர்வாக இருந்தால் (அத்தஹிய்யத்தில்)  இடதுகாலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலதுகாலை நாட்டி தரையில் அமர வேண்டும்.

 

            அவருடைய கையின் சின்னவிரல், மோதிர விரல் ஆகியவற்றை மடித்து, பெரு விரலை நடு விரலுடன் வளையல் அமைப்பில் சேர்த்து, ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி வலது முட்டுக்காலில் வைப்பார். அவரது இடது கையை இடது தொடை, முட்டுக்காலின் மீது வைத்துக்கொள்வார். பின்பு இவ்விருப்பில் அத்தஹிய்யாத் ஓதுவார்.

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُه.

பொருள் : காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்    ஸலாம் உண்டாகட்டும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

 

மேலும், முஹம்மத் ள  அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

 

            பின்பு நபி ள அவர்கள் மீது ஸலவாத் கூறி பிரார்த்தனைகளை செய்து      ஸலாம் கூறி தொழுகையை முடித்துக்கொள்வார்.

 

            மஃரிப் போன்ற மூன்று ரக்அத் தொழுகையாகவோ அல்லது ளுஹர், அஸர், இஷா போன்ற நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகவோ இருந்தால் ஏற்கனவே கூறப்பட்ட அத்தஹிய்யாத்தை ஓதுவார். பின்பு தனது முட்டுக்கால்களால் ஊன்றி, இருகைகளையும் தனது தோட்புயத்தளவிற்கு உயர்த்தி الله أكبر என்று கூறியவராக (மூன்றாவது ரக்அத்திற்காக) எழும்புவார்.

 

 11. கடைசி இருப்பில்; இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி தரையில் அமர வேண்டும். முன் கூறிய அத்தஹிய்யாத்தை ஓதியதன் பின் பின்வரும் ஸலவாத்தைக் கூறுவார். அதேபோன்று இரண்டு, மூன்று ரக்அத்கள் கொண்ட தொழுகையை முடிக்கின்ற போதும் இதனையே ஓத வேண்டும்.

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيد.

பொருள் : இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல், முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய்.

 

மேலும் நான்கு விடயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்:

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّال.

பொருள் : எங்கள் இரட்சகனே! நரக வேதனையிலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும், வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

 

அத்தஹிய்யாத்திலும் ஸூஜூதிலும் அவருக்கு தேவையான பிரார்த்தனைகளை கேட்கலாம்.

 

12. பின்னர் السلام عليكم ورحمة الله وبركاته என்று வலது, இடது பக்கங்களுக்குத் தலையை திருப்பி ஸலாம் சொல்வார்.

 

13. அனைத்து செயற்பாடுகளையும் அமைதியாக செய்து கொள்ளவேண்டும்.

 

 

தொழுகை முடிந்த பின் ஓதும் துஆக்கள்

 

أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله.

اللّهُـمَّ أَنْـتَ السَّلامُ ، وَمِـنْكَ السَّلام ، تَبارَكْتَ يا ذا الجَـلالِ وَالإِكْـرام.

لا إلهَ إلاّ اللّهُ وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُـلْكُ ولهُ الحَمْد، وهوَ على كلّ شَيءٍ قَدير، اللّهُـمَّ لا مانِعَ لِما أَعْطَـيْت، وَلا مُعْطِـيَ لِما مَنَـعْت، وَلا يَنْفَـعُ ذا الجَـدِّ مِنْـكَ الجَـد

لا إلهَ إلاّ اللّه وحدَهُ لا شريكَ لهُ، لهُ الملكُ ولهُ الحَمد، وهوَ على كلّ شيءٍ قدير، لا حَـوْلَ وَلا قـوَّةَ إِلاّ بِاللهِ، لا إلهَ إلاّ اللّـه، وَلا نَعْـبُـدُ إِلاّ إيّـاه لَهُ النِّعْـمَةُ وَلَهُ الفَضْل وَلَهُ الثَّـناءُ الحَـسَن، لا إلهَ إلاّ اللّهُ مخْلِصـينَ لَـهُ الدِّينَ وَلَوْ كَـرِهَ الكـافِرون.

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

﴿قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١ مِن شَرِّ مَا خَلَقَ ٢ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِی ٱلۡعُقَدِ ٤ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥

﴿قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١ مَلِكِ ٱلنَّاسِ ٢ إِلَـٰهِ ٱلنَّاسِ ٣ مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤ ٱلَّذِی يُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ ٥ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦

  

﴿ٱللَّهُ لَاۤ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَیُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةࣱ وَلَا نَوۡمࣱۚ لَّهُۥ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰتِ وَمَا فِی ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِی يَشۡفَعُ عِندَهُۥۤ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَیۡءࣲ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَاۤءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِیُّ ٱلۡعَظِيمُ ٢٥٥﴾ 

اللَّهُمَّ أعِنِّي عَلَى ذِكْرِكَ، وشُكْرِكَ، وحُسْنِ عِبَادَتِكَ

.

سُبْحَانَ اللَّهِ، الحَمْدُ للهِ، اللهُ أكْبَرُ   33 தடவைகள

 

 

لاَ إلَهَ إلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ، لَهُ المُلْكُ ولَهُ الحَمْدُ، وهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ.

 

 மறதிக்கான ஸஜ்தா 

இது மூன்று சந்தர்ப்பங்களில் நிகழும்

தொழுகையின் செயற்பாடுகளில் ஏதாவது ஒன்றை அதிகரித்தல். (உதாரணம் : ருகூஃ இரண்டு தடவைகள் செய்தல், ஒரு ரக்அத்தை அதிகரித்தல்)

தொழுகையின் வாஜிபில் ஒன்றை விடுதல். (உதாரணம் : முதல் அத்தஹிய்யாத் இருப்பை விட்டுவிடல்).

தொழுகையில் சந்தேகம் ஏற்படல். (உதாரணம் : ரக்அத்துகளின்  எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்படல்) இவ்வாறான நிலமைகளில் குறைந்த எண்ணிக்கையை கணக்கில் எடுக்க வேண்டும்.

 

            இவ்வாறான மூன்று நிலைகளிலும் தொழுகையில் ஸலாம் கொடுக்க முன்னர் ஸஜ்தா செய்ய வேண்டும். ஸஜ்தா ஸஹ்வின் போது ஸூஜூதில் ஓத வேண்டிய துஆவை ஓதுதல்.

 

குர்ஆன் ஓதலுக்கான ஸூஜூது

            அல்குர்ஆனை ஓதும் போது ஸஜ்தாவுடைய இடம் வந்தால் ஸஜ்தா செய்வது சுன்னத்தாகும். இது அல்குர்ஆனில் 15 இடங்களில் இடம் பெறுகின்றது. ஸூஜூதில் ஓதும் துஆவை இதில் ஓதலாம்.

 

நபி ள அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம். (ஆதாரம் - புஹாரி : 1075, முஸ்லிம் :  575)

 

நன்றிக்கான ஸூஜூது

நபி ள அவர்களுக்கு சந்தோஷம் ஏற்படுத்தும் செய்தியை கேட்டால் அல்லது நன்மாராயம் கூறப்பட்டால், இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக உடனே ஸூஜூது செய்வார்கள் (ஆதாரம் - அபூதாவூத் : 2774, திர்மிதீ : 1578)

 

இதிலும் ஸூஜூதில் ஓதும் துஆவை ஓதலாம்.

 

குறிப்பு : குர்ஆன் ஓதலுக்கான சுஜுது, நன்றிக்கான சுஜுது செய்வதற்கு வுழூ அவசியம் கிடையாது.

 

தொழுகையை முறிக்கும் காரியங்கள், தொழுகையில் தவிர்ந்து கொள்ளவேண்டிய அம்சங்கள்

தொழுகையை முறிக்கும் காரியங்கள்

தொழுகையின் ருக்னையோ, வாஜிபையோ, ஷர்தையோ வேண்டுமென்றே விடுவது.

வுழு முறிவது.

வேண்டுமென்றே பேசுவது, சிரிப்பது.

வேண்டுமென்றே சாப்பிடுவது, குடிப்பது.

தொழுகையுடன் தொடர்புபடாத மேலதிக செயற்பாடுகள்.

 

 

தொழுகையில் தவிர்ந்து கொள்ளவேண்டிய அம்சங்கள்

வானத்தை பார்த்தவராக தொழுதல்.

தேவையில்லாமல் கண்ணை மூடியவராக தொழுதல்.

அங்கும் இங்கும் பார்த்தவராக தொழுவது.

மலசலத்தை அடக்கியவராக தொழுவது.

உணவு தயாராக இருக்கின்ற போது பசித்தவரக தொழுவது.

இடுப்பில் கைவைத்தவராக தொழுவது.

அதிகமாக அசைதல்

விரலில் நெட்டி முறித்தல்.

அத்தஹியாத்து, நடு இருப்பில் மேற்குறிப்பிட்ட முறையல்லாத வேறு முறைகளில் இருத்தல்.

தேவையில்லாமல் சாய்ந்து தொழுதல்.

ஸூஜூது செய்யும் இடத்தை மாத்திரம் அடையாளம் வைத்து தொழ கூடாது.

 

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும் சட்டமும்

அல்லாஹ் கூறுகிறான் : 'தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 02 : 43)

 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ன கூறினார்கள் : 'யார் மறுமை நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றட்டும். அல்லாஹ் உமது நபிக்கு நேர்வழிகளை காட்டியிருக்கிறான். தொழுகையை உரிய நேரத்தில் தொழுவது அவன் காட்டிய வழிகளில் ஒன்றாகும். பள்ளிக்கு பிந்துபவர் வீட்டில் தொழுவதை போன்று நீங்களும் வீட்டில் தொழுதால் உமது நபியின் வழிமுறையை தவறவிட்டவராகி விடுவீர். எவர் நல்ல முறையில் சுத்தமாகி பள்ளிக்கு சென்றால் அவருடைய ஒவ்வொரு எட்டிற்கும் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மை வழங்கி, அவரது அந்தஸ்தை உயர்த்தி, பாவத்தையும் மன்னிக்கிறான். முனாபிக் என அறியப்பட்டவர்களை தவிர வேறு எவரும் ஜமாஅத் தொழுகைக்கு பிந்தமாட்டார்கள்';  (ஆதாரம் - முஸ்லிம் : 654)

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'ஜமாஅத்தாக தொழுவது தனித்து தொழுவதை விட இருபத்தி ஏழு மடங்கு நன்மை தரக் கூடியது'. (ஆதாரம் - புஹாரி : 645, முஸ்லிம் : 650)

 

ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            தொழுகையை ஜமாஅத்துடன் பள்ளிவாயலில் தொழுவது கட்டாயக் கடமையாகும்.

 

நபி ள அவர்களிடம் ஒரு பார்வையற்றவர் வந்து யாரசூலல்லாஹ் என்னை பள்ளிவாயலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. அதனால் நான் வீட்டில் தொழலாமா? என கேட்டார். அதற்கு நபி ள அவர்கள் உமக்கு அதான் கேட்கிறதா? என கேட்க அம்மனிதர் ஆம் என்றார். அப்போது நபியவர்கள் அதற்கு நீர் பதிலளிப்பீராக (பள்ளிக்கு வருவீராக) என்றார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 653)

 

 

பெண்களுக்கான ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது கூடாது. அவர்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே மிகச் சிறந்ததாகும்.

 

ஜமாஅத் தொழுகையை விட்டும் பிந்துபவர்களுக்கான சட்டம்

ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துபவர்கள் இரு கூட்டத்தினர்

முதல் கூட்டத்தினர்                    : மிகக் கடுமையான நோய், உயிராபத்து போன்ற ஏதாவது காரணத்திற்காக  ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள். இவர்கள் தனித்து தொழுதால் ஜமாஅத் உடன் தொழுத நன்மையை பெற்றுக் கொள்வார்கள்.

இரண்டாம் கூட்டத்தினர்         : எவ்வித காரணமும் இன்றி ஜமாஅத் தொழுகையை விடுபவர்கள். இவர்கள் ஒரு வாஜிபை விட்ட குற்றத்திற்கு ஆளாகின்றனர்.

 

மஃமூமுடன் (பின்பற்றித் தொழுபவர்) தொடர்புடைய சில சட்டங்கள்

பின்பற்றித் தொழுபவர் ஒரு போதும் இமாமை முந்தக்கூடாது. (இமாம் ருகூஃ செய்யாமல் ருகூஃ செய்யக் கூடாது, இமாம் ஸுஜூது செய்யாமல் ஸுஜூது செய்யக் கூடாது.)

இமாம் ருகூஃவிலிருந்து எழுமுன் மஃமூம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார். அவ்வாறில்லாத பட்சத்தில் அடுத்த ரக்அத்துக்காக இமாம் எழும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அதில் போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அது ருகூஃ அல்லது அதற்கு முன் என்றால் அது ஒரு ரக்அத்தாக கணிக்கப்படும். இல்லாவிடில் கணிக்கப்படமாட்டாது.

  

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget