Articles by "நாளும் ஒரு நபி மொழி"


19 عَنْ أَنَسٍ  عَنِ النَّبيِّ  قَالَ: ' لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ'. صحيح البخاري رقم الحديث 13 وصحيح مسلم رقم الحديث 71- (45) واللفظ للبخاري.



(19) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

ஆதாரம் : புஹாரி : 13, முஸ்லிம் : 45 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)



ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள விருப்பம் என்பது சுயநினைவுடன் ஏற்படும் விருப்பமாகும். மாறாக இயற்கையானதோ அல்லது பலவந்தமாக ஏற்படுத்திக்கொண்ட விருப்பமோ அல்ல.

(2) ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை விரும்புவதற்கான அடையாளங்களிலுள்ளது அவனுக்கு ஈருலகிலும் பயன்தரக்கூடியதை காட்டிக் கொடுப்பதும், அவனை நோவினை செய்யாமலிருப்பதுமாகும்.

(3) ஒரு முஸ்லிமை அவனது அறிவியல், சமூக நிலைக்கேற்ப மதிப்பதை இந்நபிமொழி தூண்டுகிறது.

(4) பிறர் தனக்கு செய்ய விரும்பாத ஒன்றை ஒரு முஸ்லிம் ஒருபோதும் அடுத்தவர்களுக்குச் செய்யக்கூடாது.


18-
 عَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ:  'مَنْ كَانَ لَهُ شَعْرٌ؛ فَلْيُكْرِمْهُ'. سنن أبي داود رقم الحديث 4163 قال العلامة محمد
 ناصر الدين الألباني عن هذا الحديث: حسن صحيح.


(18) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'யாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதை (அழகாக சீவி) கண்ணியப்படுத்தட்டும்'.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

ஆதாரம் : அபூ தாவூத் 4163. அஷ்ஷேஹ் அல்பானீ (ரஹ்) இந்நபிமொழி ஸஹீஹ், ஹஸன் எனும் தரத்திலுள்ளதெனக் கூறியுள்ளார்கள்.

(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)



ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

  1. இஸ்லாம் அழகை விரும்பும் ஒரு மார்க்கமாகும்.
  2. எப்போதும் ஒரு முஸ்லிமுடைய தோற்றம் நல்லதாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்று இந்நபிமொழி தூண்டுகிறது.
  3. தலைவிரிகோலமாக இருப்பது இறையச்சத்துடையவோ, துறவரத்துடையவோ வெளிப்பாடல்ல.




17- عَنْ أَنَسٍ يَقُوْلَ: كَانَ النَّبيُّ إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ: 'اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ'. صحيح البخاري رقم الحديث 142 وصحيح مسلم رقم الحديث 122- (375) واللفظ للبخاري 
.
(17) 'கழிப்பிடத்திற்குச் செல்லும்போது, 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குபுஸி வல் கபாஇஸி' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்'.

'இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும்) ஆண், பெண் ஷைத்தான்களைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

ஆதாரம் : புஹாரி : 142, முஸ்லிம் : 375 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)



ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:



  1.  குறிப்பிட்ட இடங்கள் மற்றும் நேரங்களுக்கென்று (ஆதார அடிப்படையில்) வந்திருக்கும் பிரார்த்தனைகளை ஓதுவது மனிதனை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அனைத்துக் கெடுதிகளிலிருந்தும் பாதுகாக்கும்.
  2. கட்டிடங்களிலும், வெட்டவெளியிலும் இந்த துஆவை ஓதுவதும், மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை மனித ஜின்களின் பார்வைகளை விட்டும் மறைப்பதும் மலசலம் கழிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களிலுள்ளதாகும்.
  3.  நபிமொழியில் இடம்பெற்றுள்ள 'குபுஸ்' என்ற வார்த்தை 'கபீஸ்' என்பதன் பன்மையாகும். அதே போன்று 'கபாஇஸ்' என்ற வார்த்தை 'கபீஸத்' என்பதன் பன்மையாகும். இதன்மூலம் நாடப்படுவது ஆண், பெண் ஷைதான்களாகும். மேலும் 'குபுஸ்' என்றால் ஷைதான்கள், 'கபாஇஸ்' என்றால் பாவங்கள் என்றும் ஒரு கருத்து (அறிஞர் மத்தியில்) உள்ளது.

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget