Do.Tramp இன் "குத்ஸ்" தலைநகர அறிவிப்பும் முஸ்லிம்களும் ! F.R.Muhammad (Abbasy, Riyady)

சென்ற புதன்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் குத்சை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் விதத்தில் தன் தூதரகத்தை குத்ஸிற்குமாற்றுமாறு விடுத்த அறிவித்தல் பல சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி பல ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக் கோசங்கள் என்று பல கண்டனஅறிக்கைகளை நாம் காண்கிறோம். கனடா, கொரியா போன்ற முக்கிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.

இந்த நேரத்தில் நாம் மிக முக்கியமாக சில விடயங்களை எம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கொள்ளவேண்டும். இப்படியான நிகழ்வுகள் முஸ்லிம் உம்மத்திற்கு புது விடயமோ, ஆச்சரியப்பட வேண்டிய அம்சமோ கிடையாது . ஏனெனில் ஏற்கனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் பலஸ்தீனின் குத்ஸ் உட்பட அதிக பகுதிகள் இன்று வரை இருக்கிறது அது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்காவோ முஸ்லிம்களுக்கு நலவு செய்யவோ உதவி செய்யவோ முன்வரப் போவதுமில்லை.

அதேபோன்று தான் இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த நாடுகளையோ அடுத்தவர்களையோ குறைகூற முன், ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முன் ஒரு முறை நான் இஸ்லாமியனாக இருக்கிறேனா, என்னிடம் இஸ்லாம் இருக்கிறதா என்று எங்களின் பக்கமே எம் ஆல்காட்டி விரலைத் திருப்பி கேள்வி கேட்க வேண்டிய கட்டாயக் கடமையில் இருக்கிறோம்.

முகத்தில் ஒரு துளிகூட தாடிகூட இல்லை, ஜமாஅத் தொழுகைக்கே செல்வதில்லை, குர்ஆன் ஓதிய நாவுகளையே தேடிப்பார்க்கவேண்டும் என்றிருக்க உலக மக்களின் பிரச்சினைக்கு இவர் தான் தீர்வு சொல்லப்போவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அந்த நாடு இன்னும் ஏன் மௌனமாக இருக்குது, அது அமெரிக்காவிற்கு வால்பிடிக்கும் நாடு, யூதர்களின் கைக்கூலி என்றெல்லாம் கொக்கரித்து எந்தப் பயனும்கிடையாது. அல்லாஹ் கூறுகின்றான் “ இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக்கொடுத்தால், இவர்கள் தொழுகையை நிலைநாட்டி; ஸகாத்தையும் கொடுத்து நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பார்கள், மேலும், சகல காரியங்களின்முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.”

எனவே முதலில் எம்மில் இஸ்லாத்தைக் கொண்டு வந்து எம்மை நரகை விட்டும் மீட்கும் பணியைச் செய்துவிட்டுதான் அடுத்தவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும்.

குத்சைப் பாதுகாக்க வேண்டுமென்றால், இஸ்ரேலை அங்கிருந்து விரட்ட வேண்டுமென்றால் எம்மிடம் அதற்கான பூரண பலமும் சக்தியும் காணப்பட வேண்டும், அப்பலத்தைப்பெற அல்லாஹ்வின் உதவி வேண்டும், அல்லாஹ்வின் உதவியைப் பெற அவனுக்கு நாம் உதவவேண்டும். அல்லாஹ்வுக்கு உதவுவது என்பது இஸ்ரேலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வதோ, பேனாக்களால் கிறுக்கி விளையாடுவதோ, அடுத்த நாடுகளையும் மன்னர்களையும், உலமாக்களையும் திட்டித் தீர்ப்பதோகிடையாது மாற்றமாக நாம் எங்களை இறைவனுக்குப் பொருத்தமான அடியானாக மாற்றுவதே தவிர வேறில்லை. அல்லாஹ் கூறும்போது “ அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்போர் எவருமில்லை, அவன் உங்களைக் கைவிட்டு விட்டால் அதன் பின் யார்தான் உங்களுக்கு உதவி செய்வார்கள்"

எனவே எம் பேனாக்களையும், நாவுகையும்அடுத்தவர்களுக்காக உபயோகிக்க முன் எமக்காக உபயோகித்து அதன் மூலம் முஸ்லிம் உம்மத்திற்கு உதவ முயற்சிப்போமாக...

F.R.Muhammad (Abbasy,Riyady) 
B.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget