யூதர்களின் பண்புகள் பகுதி 01 || By: Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

கலாநிதி அமீன் அப்துல்லாஹ் அஷ்ஷகாவீ
தமிழில் : எம். அஹ்மத் (அப்பாஸி)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் அனைவருக்கும் உண்டாவதாக!. இணையில்லாத் தனித்தவனாகிய அல்லாஹ் மாத்திரமே உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தோழருமெனவும் நான் சாட்சி பகர்கின்றேன்.

அல்லாஹ் கூறுகின்றான் : "விசுவாசங் கொண்டோருக்கு மிகவும் பகைவர்களாக மனிதர்களில் யூதர்களையும், இணைவைப்பாளர் களையும் கண்டுகொள்வீர்" (மாஇதா : 82). மனிதர்களிலே முஸ்லிம்களுக்குப் பரம எதிரிகளாகத் திகழ்வது யூதர்கள் தான் என இறைவன் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். மேலும், முஸ்லிம்களுக்கெதிராகப் பல பிரச்சினைகளையும் யுத்தங்களையும் மூட்டி விடுவது இவர்களது பணியென மற்றுமோர் வசனத்தில் கூறுகின்றான் : "மறுமை வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம். அவர்கள் போர் எனும் தீயை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான், அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர், குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்புவதில்லை" (மாஇதா : 64). 

யூதர்களின் சூழ்ச்சிகளிலிருந்து யாருமே தப்பவில்லை. அல்லாஹ்வின் மீது அபாண்டம் சுமத்துமளவு துணிந்து விட்டார்கள். அவனுக்குப் பிள்ளையிருப்பதாக இட்டுக்கட்டினார்கள் : "உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏகஇறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (தௌபா : 30).

"அல்லாஹ் பரம ஏழை, நாங்கள் தான் செல்வந்தர்கள்" என்ற கூற்றும் யூதர்கள் அல்லாஹ் மீது சுமத்திய மற்றுமோர் அபாண்டமாகும். "அல்லாஹ் தேவையுள்ள பரம ஏழை, நாங்கள் தான் தேவைகளற்ற செல்வந்தர்கள்" என்று கூறுவோரின் கூற்றை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியதையும், நபிமார்களை உரிமையின்றிக் கொன்றதையும் நாம் எழுதி வைப்போம். "சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள் என்றும் கூறுவோம்". (ஆல இம்ரான் : 181).

இது போன்ற குப்ரிய்யத்தான, படுமோசமான வார்த்தைகளாலும், அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல், அவனது மார்க்கத்திற்குத் தடையாக இருத்தல் போன்ற பல காரணங்களாலும் யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளானார்கள். அவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களில் சிலரையே குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினான். அதுபற்றி பின் வரும் இரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன : "அல்லாஹ்விடம் இதைவிட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து, கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ அவர்களே (தீய இடத்திற் குரியவர்கள்). (மாஇதா : 60), "மறுமை வரை அவர்களுக்குக் கொடிய வேதனை அளிப்போரையே அவர்களுக்கு எதிராக நியமிப்பதாக உமது இறைவன் பிரகடனம் செய்ததை நினைவூட்டுவீராக!" (அஃராப் : 167).

யூதர்கள் பல தீய பண்புகளால் பிரசித்தி பெற்றவர்கள். அவற்றை அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ளான். மறுமை வரை இப்பண்புகள் அவர்களிடம் வேரூன்றியே இருக்கும், முஸ்லிம்களாகிய நாம் தான் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் சில முக்கிய பண்புகளை இங்கு பார்ப்போம் :

01.துரோகம், காட்டிக் கொடுப்பு, உடன்படிக்கை, வாக்குறுதிகளை முறித்தல் : "அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம், அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர்" (மாஇதா : 13) என்று இறைவன் கூறுகின்றான். வரலாறும் இதற்கு சான்று பகர்கின்றது. நபி (ஸல்) அவர்களுடன் பல முறை ஒப்பந்தங்களை முறித்துள்ளனர், கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து, அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்களும் அதனை உண்டு, பல வருடங்கள் இதனால் சிரமப்பட்டார்கள். (புஹாரி 5777). 

பலஸ்தீன் நாட்டில் எமது உடன்பிறப்புக்களுக்கு நடக்கும் அநீதிகளே அவர்களுடைய துரோகத்திற்கு மிகப்பெரும் சான்றாகும். அவர்களுக்கு ஒப்பந்தம், உடன்படிக்கை பயனளிக்காது. கடுமையும், பலமும் தான் அவர்களுக்குப் பொருத்தமான தீர்வு. அதனால்தான் யூதர்கள் அகழ்ப்போரின் போது ஒப்பந்தமீறலில் ஈடுபட்ட போது நபி (ஸல்) அவர்கள் இவர்களை முற்றுகையிட்டு, ஸஃத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்வுக்கு இணங்கினார்கள். ஸஃத் (ரலி) அவர்கள் : "இவர்களில் போராளிகள் கொல்லப்பட வேண்டும், பெண்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும், உடமைகள் பங்கு வைக்கப்படல் வேண்டும்" என தீர்ப்பளித்தார்கள். அப்போது நபியவர்கள் "இவர்கள் விடயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளீர்கள்" என்றார்கள். (புஹாரி 38, முஸ்லிம் 1768).

02.தமக்கு வழிகாட்ட வந்த நபிமார்களையே கொன்றவர்கள் : ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) மற்றும் பல நபிமார்களை இவர்கள் கொலை செய்துள்ளார்கள். "அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும், வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்" (ஆல இம்ரான் : 112). மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மறுமையில் கடுமையான வேதனைக் குள்ளாகுபவர் யாரெனில் நபியால் கொல்லப்பட்ட, அல்லது நபியை கொலை செய்த மனிதராகும்". (அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம் : அஹ்மத் 3868).

03.அல்லாஹ்வுக்கு மாறு செய்வதும், படைப்புக்களிடம் அத்துமீறுவதும், தமக்கு மத்தியில் தீமையைத் தடுகாமலிருப்பதும் யூதர்களுடைய தீய பண்புகளிலுள்ளதாகும். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம், அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. (மாஇதா : 78, 79). 

04.மனிதர்களின் பணத்தை சுரண்டுதல் : "அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது, அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது" என்று இறைவன் கூறுகின்றான். (மாஇதா : 62, 63). அதனால் தான் யூதர்கள் மாற்று சமூகங்களின் தலைவிதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வற்காக வங்கிகளையும், உலக பொருளாதாரத்தையும் ஆக்கிரமிக்க ஆர்வங்கொள்கின்றனர். 

05.சத்தியத்தை மறைத்தல் : அதாவது அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்தும்படி அவர்களுக்கு ஏவிய மார்க்க அறிவை தமக்குப் பாதகமாக இருந்தால் மறைத்து விடுவார்கள். "வேதம் கொடுக்கப் பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது" (ஆல இம்ரான் : 187). அழிந்து போகும் இவ்வுலக அற்ப நோக்கங்களுக்காக சத்தியத்தை அவர்கள் மறைப்பதாக அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். 

06.பொறாமை : அல்லாஹ் கூறுகிறான் : "நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம்" (பகரா : 109).

மிகுதி அடுத்த பகுதியில் எதிர் பாருங்கள் இன்ஷா அல்லாஹ் ...!

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget