யூதர்களின் பண்புகள் பகுதி 02 || By: Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

கலாநிதி அமீன் அப்துல்லாஹ் அஷ்ஷகாவீ
தமிழில் : எம். அஹ்மத் (அப்பாஸி)
07. கோழைத்தனம் : யூதர்கள் முஸ்லிம்களை நேரடியாகக் களத்தில் சந்திப்பதில் கடும் கோழைகளாகவே இருப்பர். "அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிடமாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்" (ஹஷ்ர் : 14) என்று இறைவன் கூறுகின்றான். மற்றுமொரு வசனத்தில் "தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்படமாட்டார்கள்" (ஆல இம்ரான் : 111) என்று கூறுகின்றான். இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : "இவ்வாறே நிகழ்ந்தது, அவர்களை அல்லாஹ் கைபர் போரின் போது இழிவடையச் செய்தான், அதற்கு முன்னர் மதீனாவில் வசித்த பனூ கைனுகாஃ, பனூ நழீர், பனூ குரைழா போன்ற யூதக் கோத்திரத்தினரை அல்லாஹ் இழிவடையச் செய்தான்" (தப்ஸீர் இப்னு கஸீர் : 3/ 159). சமகாலத்தில் இவர்கள் கோழைகள் என்பதற்கான மிகப்பெரிய சான்று என்னவெனில், வெறும் கற்களுடன் பலஸ்தீனச் சிறுவன் ஆயுதம் தரித்த யூத இராணுவனை விரட்டிச் செல்லும் போது, தனது உயிருக்குப் பயந்து அப்படைவீரன் ஓட்டம் பிடிப்பதை கண்கூடாகக் காண்கிறோம். 

08. அசிங்கங்களை அரங்கேற்றுவார்கள் : பூமியில் போதைப்பொருள், விபச்சாரம் மற்றும் பல ஒழுக்க சீர்கேடுகளைப் பரப்புவதில் யூதர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்கள் தான் அசிங்கத்தின் முகவர்கள், சீர்கேடுகளின் தரகர்கள். ஒழுக்கக் கேடான படங்களைத் திரையிடும் பல சேனல்களை இவர்கள்தான் ஆக்கிரமித்துள்ளார்கள். அத்துடன் இறைமறுப்பையும், நாத்திகத்தையும் பரப்பி, முஸ்லிம் களின் அடிப்படைக் கொள்கைகளில் சந்தேகங்களைத் தோற்றிவித்து, தங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் பயன் படுத்தி பூமியில் குழப்பங்களை விளைவிக்கவே முற்படுகின்றனர். "அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர், குழப்பம் விளைவிப் போரை அல்லாஹ் விரும்புவதில்லை" (மாஇதா : 64) என்று அல்லாஹ் யதார்த்தமாகவே கூறியுள்ளான்.

09. உயிர் வாழப் பேராசை பிடித்தவர்கள் : அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "அல்லாஹ்விடம் உள்ள மறுமை வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணிப்பதற்கு ஆசைப்படுங்கள்!'' என்று கூறுவீராக!. அவர்கள் செய்த வினை காரணமாக ஒருபோதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலி ருந்து அவரைத் தடுப்பதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்". (பகரா : 94 - 96).

இவ்வசனத்தின் விளக்கம் என்னவெனில் : யூதர்களே! ஏனைய மனிதர்களை விடுத்து நீங்கள்தான் உண்மையிலே அல்லாஹ்வின் நேசர்களாக இருந்தால், அவனுடைய பிள்ளைகளாகவும், தோழர்களாகவும் இருந்தால், நீங்கள் மாத்திரம்தான் சுவனவாதிகள், ஏனையோர் நரகவாதிகள் என்றால் இவ்விடயங்களில் அழிவுச் சத்தியம் செய்ய வாருங்கள், உங்களில் பொய்யர்களுக்கு எதிராக பிரார்த்தியுங்கள், அழிவுச் சத்தியம் பொய்யர்களை கூண்டோடு அழித்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவது முதல், தமது பிள்ளைகளை அறிந்து வைத்திருப்பது போன்று அறிந்து வைத்திருந்த நபி (ஸல்) அவர்களின் பண்புகள் உட்பட சத்தியத்தை மறைப்பது வரை அனைத்திலும் இவர்கள்தான் பொய்யர்கள் என்பதை உறுதியதாக நம்பியிருந்ததால் அவர்களே அழிவுச் சத்தியத்திலிருந்து பின்வாங்கி விட்டார்கள். இந்த அழிவுச் சத்தியத்தை ஆசையென மேற்கண்ட வசனத்தில் வர்ணித்திருப்பதற்கு காரணம், சத்தியத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தம்முடன் விவாதிக்கும் எதிரியை அல்லாஹ் அழிக்க வேண்டுமென்றே ஆசை வைக்கின்றார்கள். மரணத்திற்குப் பின் தமக்கு என்ன அழிவுகள் உள்ளன என்பதை யூதர்கள் அறிந்து வைத்திருப்பதால்தான் அவர்கள் மரணத்தை வெறுத்து இவ்வுலகில் நீடூழி காலம் வாழப் பேராசை கொண்டார்கள். அதனை முறியடிக்கும் விதத்தில்தான் அதே மரணத்தை வைத்து அழிவுச் சத்தியம் செய்யும்படி பணித்துள்ளான். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "யூதர்கள் மரணத்தை ஆசை வைத்தால் உமிழ்நீர் தொண்டையில் சிக்கியதைப் போன்று தத்தளித்திருப்பார்கள்". மேலும் கூறினார்கள் : "அவர்கள் மரணத்தை ஆசை வைத்திருந்தால் மரணித்திருப்பார்கள்". (தப்ஸீர் இப்னு கஸீர் : 1/ 494 இதன் அறிவிப்பாளர் வரிசை வலுவானதெனக் கூறியுள்ளார்கள்.)

10. கஞ்சத்தனம் : யூதர்கள் அல்லாஹ்வைக் கஞ்சனென வர்ணித்தார்கள். "அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான்" (பகரா : 245) என்ற வசனம் இறங்கிய போது "முஹம்மதே! உமது இறைவன் வறியவனாகி விட்டான் போலும், தனது அடியார்களிடம் கடன் கேட்கிறான்?" என்று கிண்டலடித்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்து அதே கஞ்சத்தனத்தின் மூலம் அவர்களை சோதித்தான். "அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடிய வாறு வழங்குவான்" (மாஇதா : 64) என்று கூறுகின்றான். இதனால் இன்று உலகில் அதிக கஞ்சத்தனமுள்ளவர்களாகவும், மிகக் குறைவாக செலவு செய்யக்கூடியவர்களாகவும் இந்த யூதர்களே காணப்படுகின்றனர். 

11. இழிவானவர்கள் : அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது" (ஆல இம்ரான் : 112). இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹ்) கூறுகின்றார்கள் : "முஹம்மத் (ஸல்) அவர்களைப் பொய்ப்பித்த யூதர்கள் பூமியில் எப்பகுதியில் இருந்தாலும், முஸ்லிம் பிரதேசத் திலோ, இணைவைப்பாளர்களின் பிரதேசத்திலோ எங்கு வசித்தாலும் அவர்களுக்கு இழிவு விதியாக்கப்பட்டுள்ளது. "அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர". இங்கு மனிதர்களின் உடன்படிக்கை என்பது இஸ்லாமிய நிலப்பரப்பில் அவர்கள் குடியேற முன் விசுவாசிகளிடமிருந்து தமது உயிர், குடும்பம், உடமைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்துக் கொள்வதற்கான உடன்படிக்கையாகும்" (தப்ஸீர் தபரீ : 3/ 394).

தற்போது இவர்கள் அமெரிக்க கிறிஸ்தவர்களின் பாதுகாப்பில் உள்ளனர். எவ்வளவு தான் அவர்கள் தம்மிடம் அனு ஆயுதங்களை வைத்திருந்தாலும், முன்னேற்றகரமான போர் விமானங்கள், யுத்த தாங்கிகளை வைத்திருந்தாலும், படைப்பலத்தில் முஸ்லிம்களை விட மேலோங்கியிருந்தாலும் இன்னொரு சமூகத்தின் தயவில் காலம் கடத்தும் இழிவான கோழைகளே யூதர்கள். "அல்லாஹ் தன் காரியத்தில் வெல்பவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்" (யூஸுப் : 21). 

புகழனைத்தும் அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்களுக்கும் உண்டாகட்டுமாக!.

முற்றும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget