வாராந்த வினா விடைப் போட்டி அறிவித்தல் |

சவூதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்தி வருகின்றனர். அதன் தொடராக சென்ற வருடங்களில் (2017, 2018) ரமழான் மாதத்தில் தமிழ் பேசும் உலகில் “ரவ்ழது ரமழான்” எனும் தொனிப்பொருளில் தபால் மூலம் போட்டி நிகழ்ச்சி ஒன்றை சிறப்பாக நடாத்தியிருந்தது. 

அந்தவகையில் சென்ற ரமழானுக்கு முன் சுமார் 10 வாரங்களாக நடைப்பெற்று வந்த "alimamslsf இன் வாராந்த வினா விடைப் போட்டி" ரமழானுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. வாசகர்களின் வேண்டுதலுக்கும், இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் மீண்டும் வரும் சனிக்கிழமை முதல் தொடர்ந்து வாரா வாரம் போட்டி நிகழ்ச்சியை நடாத்த போட்டிக் குழு தீர்மானித்துள்ளது.

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

குறித்த கேள்விக்கான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

விடைக்கான பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் வாரா வாரம் வழங்கப்படும்.

இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எனவே குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்ப, நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget