2018 புதிய ஆண்டும் நாமும் ! sajideen mahroof (Sahvy, Riyadhy) B.A Reading

புத்தாண்டு பண்டிகை ஈஸா நபி அவர்களின் பிறப்போடு தொடர்புபட்டதாகும். கிறிஸ்தவர்களிடத்தில் டிசம்பர் – 31 இரவுக்கென்று தனித்துவமான வழிகெட்ட சிந்தனைகள் காணப்படுகின்றன. இவைகள் டிசம்பர் – 25 இல் இருந்து ஆரம்பிக்கின்றன. 

புத்தாண்டை மையமாக வைத்து முஸ்லிம்களிடத்தில் பல வழிகெட்ட புரிதல்கள் காணப்படுகின்றன. அந்த நாள் அண்மிக்கும் போது தமது வீடுகளை, வியாபார நிலையங்களை துப்புரவு செய்து ஒளி விளக்குகளால் அலங்கரிப்பார்கள், happy new year என்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தொங்க விடுவார்கள், உணவுகள், குடிபானங்கள், பலகாரங்கள், இனிப்பு பண்டங்களை பரிமாறுவார்கள். அந்த நாளில் யாரும் யாருக்கும் ஏசவோ, கோபப்படவோ கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் அந்த நாளில் ஏதும் தீங்கு நடந்தால் அது வருடம் பூராக நீடிக்கும் என்று பயப்படுவார்கள். நல்ல திட்டங்களை வகுத்து அது வருடம் பூராக தொடரும் என்று நம்புவார்கள். இவற்றுக்கெல்லாம் எந்தவித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது. 

இன்னும் அந்நாளில் நேரடியாகவோ அல்லது சமுக வலைதளங்கள் மூலமாகவோ வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். அல்லது வாழ்த்துக்களுக்கு பதிலும் அளிப்பார்கள். இவைகள் அனைத்தும் ஹராமாகும். முற்றிலும் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இது முஸ்லிம்களின் பண்டிகை அல்ல கிறிஸ்தவர்களின் பண்டிகையாகும். 

புத்தாண்டு எந்த வகையில் இஸ்லாமிய மார்க்கத்தோடு முரண்படுகிறது

01- இந்நாளை பெருநாளாக கொண்டாடுவது பித்அத் ஆகும். இதற்கு இஸ்லாத்தில் எந்த வித அடிப்படையும் கிடையாது.

நபி ( ஸல் ) கூறினார்கள் : யார் ஒருவர் இஸ்லாம் சொல்லாத ஒரு செயலை செய்கிறாரோ அந்த செயல் அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. ( முஸ்லிம் )

குறிப்பிட்ட ஒரு நாளை பண்டிகையாக கொண்டாடி, வாழ்த்துக்கள் பரிமாற வேண்டும் என்றால் அதற்கு மார்கத்தில் அங்கீகாரம் இருக்க வேண்டும்.

02- ஒரு முஸ்லிம் நோன்பு, ஹஜ் ஆகிய பெருநாட்கள் தவிர வேறு ஒரு பண்டிகையை கொண்டாடுவது ஹராமாகும். 

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது; அந்த மக்கள் இரண்டு நாட்களில் விளையாடி மகிழ்பவர்களாக இருந்தார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹூத்தஆலா இந்த இரண்டு நாட்களுக்கு பகரமாக உங்களுக்கு வேறு இரு நாட்களை ஆக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். ( அஹ்மத் ) 

03- இஸ்லாத்தில் எவருடைய பிறப்பையும் மையமாக வைத்து அவர்கள் பிறந்த நாளில் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாது ( உதாரணம் : நபிமார்கள், நல்லடியார்கள் ) பிறப்பும், இறப்பும் இறைவனிடத்தில் எந்தவொரு நலவையோ, தீங்கையோ ஏற்படுத்தாது. 

நபியர்வர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அந்த மக்கள் "நபிகளாரின் மகன் இப்ராஹிம் மரணித்ததால் தான் இது ஏற்பட்டது" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் நிச்சயமாக எவர் வாழ்வதன் மூலமாகவோ, அல்லது மரணிப்பதன் மூலமாகவோ சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. கிரகணம் ஏற்படுவதை கண்டால் தொழுங்கள், பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினார்கள். ( புகாரி )

இதனால் தான் எவர் பிறப்பதாலும், மரணிப்பதாலும் எந்தவோரு நலவோ, கேடோ எற்படுவதில்லை. அதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு முக்கியத்துவமும் கிடையாது, நல்லடியார்கள் யாரும் இதனை மையமாக வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் கிடையாது. 

04- ஈஸா நபி அவர்கள் பிறந்ததை மையமாக வைத்து கொண்டாடுவது அவர்கள் மீது அதீத அன்பு கொள்வதும், அவர்களை எல்லை கடந்து புகழ்வதுமாகும். இது கிறிஸ்தவர்களின் பண்பாகும்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா நபியவர்களை புகழ்ந்தது போன்று என்னை புகழ வேண்டாம், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், நீங்கள் ( என்னை ) இறைவனின் அடியான், அவனின் தூதர் என்றே கூறுங்கள். ( புகாரி ) 

நபிமார்களை எல்லை கடந்து புகழ்வதை, அவர்களின் மீது அதீத அன்பு காட்டுவதை, அவர்களை வணங்குவதை, அவர்களின் அந்தஸ்தை மனிதன் என்ற அந்தஸ்தை விட்டும் அதிகரிப்பதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது. இறைவன் அவனை மட்டும் வணங்குவதற்காக நபிமார்களை, ரசூல்மார்களை அனுப்பினான். மாறாக நபிமார்களை மக்கள் வணங்க, புகழ அதீத அன்பு காட்ட அனுப்பப்படவில்லை.

05- இந்த நாளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, முஸ்லிம் அல்லாதவர் ( காபிர் ) கள் மீது அன்பு கொள்வது, அவர்களின் உணர்வுகளில் இரண்டற கலப்பது, பல சந்தர்ப்பங்களில் அவர்கள் சரியான பாதையில் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்பதாக உணர்த்திவிடுகிறது. இவை அனைத்தும் இஸ்லாத்தில் ஹராமாகும்.

அல்லாஹ்வுத்தஆலா கூறுகிறான் ; முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

06- இந்நாளை முஸ்லிம்கள் பண்டிகையாக கொண்டாடுவதால் அவர்கள் கிறிஸ்தவர்களோடு ஒன்றாகிவிடுகிறார்கள், அவர்களுக்கென்றே தனித்துவ பண்புகளில் இவர்களும் கூட்டுச் சேர்ந்து விடுகிறார்கள். 

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு கூட்டத்திற்கு சொந்தமான அமலை செய்கிறாரோ அவரும் அக்கூட்டத்தை சேர்ந்தவராவார். ( அபூதாவூத் ) 
வெளி நடத்தைகளில் ஒப்பாவது அவர்களின் கொள்கை சார்ந்த விடயங்களில் ஒப்பவதை குறித்து நிற்கும். இதனால் இஸ்லாம் மாற்று மதத்தவர்களோடு ஒப்பாகும் அனைத்து அம்சங்களையும் தடை செய்திருக்கிறது.

07- முஸ்லிம்களின் பண்டிகை இரு பெரும் வணக்கங்களின் (நோன்பு,ஹஜ்) அமையப்பெற்றிருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தங்கள் இறைவனுக்கு நன்றிசெலுத்துகிறார்கள். அதே போன்று முஸ்லிம்கள் அந்த இரு பெரும் வணக்கங்களை நிறைவேற்றி அந்த நாளில் சந்தோசமடைகிறார்கள். இந்த சிறப்பம்சம் இந்த புத்தாண்டு பண்டிகையில், கிறிஸ்தவ மதத்தில் கிடையாது, எனவே ஒரு முஸ்லிம் இந்த பண்டிகையை கொண்டாடவும் முடியாது, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றவும் முடியாது. 

08- இந்நாளில் பண்டிகை கொண்டாடுவது நபி ( ஸல் ) அவர்களின் வழிமுறைக்கு முரணானதாகும். 

ஏனனில் நபியவர்கள் அவர்களுக்கென்றே தனித்துவ பண்புகளில், ஆடை அணிகலன்களில், வணக்க வழிபாடுகளில் மாற்றமாக நடந்து காட்டியிருக்கிறார்கள். இதனை ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். இது ஒரு முஸ்லிம் தவிர்ந்து கொள்ள வேண்டிய பாரிய அடிப்படை அம்சமாகும். இதனை நபியவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். 

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் முன்னோர்களின் அடிச்சுவட்டை முழம் முழமாக, சான் சானாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கெனில் அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள். அதற்கு ஸஹாபாக்கள் (நபியவர்களிடத்தில்) நீங்கள் யூத, கிறிஸ்தவர்களையா? சொல்கிறீர்கள் என்று கேட்கே அதற்கு நபியவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். ( புகாரி, முஸ்லிம் )

எனவே இப்படியான இஸ்லாத்தை விட்டும் எம்மை தூரமாக்கும் வழிபாடுகள் அவை கடுகளவானாலும் அவற்றிலிருந்து முற்று முழுதாக விலகி நடப்பதோடு, இஸ்லாமிய கடமைகளுக்கு முக்கியமளித்து எம் வாழ்வில் செயற்படுத்த வல்ல இறைவன் துணை புரிவானாக!

ஆக்கம் : sajideen mahroof (Sahvy, Riyadhy) B.A Reading

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget