ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 09

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்வதற்கான நிபந்தனைகள்

01. நபி ள அவர்களை உண்மைப்படுத்தல்.

அல்லாஹ் கூறுகிறான், 'அவர் தனது இச்சைப்படி எதையும் பேசுவதில்லை'. (அல்குர்ஆன் - 53 : 3,4)

02. நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.

அல்லாஹ் கூறுகிறான், (நபியே!) நீர் கூறும் 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்'. (அல்குர்ஆன் - 03 : 31)

03. நபி (ஸல்) அவர்களை நேசித்தல்.

அல்லாஹ் கூறுகிறான், 'உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்' என்று கூறுவீராக!'. (அல்குர்ஆன் - 09 : 24)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'உங்கள் பெற்றோர், பிள்ளைகள், ஏனையவர்களை விடவும் ஒருவருக்கு நான் பிரியமானவனாக ஆகாத வரை உங்களில் யாரும் பரிபூரண ஈமான் கொண்டவராக ஆக முடியாது'. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம் - புஹாரி : 15, முஸ்லிம் : 44)

04. நபியவர்கள் காட்டிய வழியில் அல்லாஹ்வை வழிப்படுதல்.

அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர் கூறும் 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்'. (அல்குர்ஆன் - 03 : 31)

05. நபியவர்களை துன்புறுத்தாது இருத்தல்.

அல்லாஹ் கூறுகிறான். 'எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்;. மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்'. (அல்;குர்ஆன் - 33 : 57)

இங்கு துன்புறுத்தல் என்ற சொல் நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த மார்க்கத்தையும், அவரது வழிமுறையையும் கேலி செய்வதையும், அவரது குடும்பத்தார்கள், முஃமின்களின் தாய்மார்களாக திகழும் அவரது மனைவிமார்களை இழிவுபடுத்தி, அவர்களுக்கு தூற்றித் திரிவதையும் குறிக்கும்.

06. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுதல்.

அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் இந்த நபிக்கு ஸலவாத்து கூறுகிறான். வானவர்களும் அவருக்காக ஸலவாத்து கூறுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்!'. (அல்குர்ஆன் - 09 : 56)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'யார் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொல்கிறாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதராம் - முஸ்லிம் : 408)

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸலவாத் என்ற சொல் இரண்டு பொருள் கொண்டதாகும். ஒன்று, அல்லாஹ் அருள் புரிதல். மற்றொன்று, அல்லாஹ்விடத்தில் அருளை வேண்டுதல். அதனடிப்படையில் இந்த ஹதீஸுக்கான பொருளைக் கவனித்தால், யார் என் மீது ஒரு முறை அருளை வேண்டுகிறாரோ, அல்லாஹ் அவருக்கு 10 முறை அருள் புரிகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்களுக்கு பின்வருமாறு ஸலவாத்துச் சொல்வது தான் மிகவும் ஏற்றமானது

'அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம, வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்'

பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் மீதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் மீதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். (அறிப்பவர் - கஃப் இப்னு உஜ்ரா (ரலி) , ஆதாரம் - புஹாரி : 6357, முஸ்லிம் : 406)

(இது ஹதீஸில் இடம் பெற்றுள்ள ஸலவாத்தாகும். இது தவிர்ந்த ஸஹீஹான அடிப்படையில் வந்துள்ள முறைகளிலும் ஸலவாத் சொல்லலாம்).

வினா இல - 09
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதன் சிறப்பு பற்றிய ஓர் ஹதீஸை குறிப்பிடுக?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget