நாளும் ஒரு நபி மொழி 16 || Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA



عَنْ أَبيْ هُرَيْرَةَ  أَنَّ رَسُوْلُ اللهِ قَالَ:  'كُلُّ أُمَّتِيْ يَدْخُلُوْنَ الْجَنَّةَ إِلاَّ مَنْ أَبَى'. قالوا: يَا رَسُوْلَ اللهِ! وَمَنْ يَأْبَى؟ قَالَ: 'مَنْ أَطَاعَنِيْ دَخَلَ الْجَنَّةَ, وَمَنْ عَصَانِيْ؛ فَقَدْ أَبَى'. صحيح البخاري رقم الحديث 7280

(16) (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

ஆதாரம் : புஹாரி : 7280

(13 முதல் 16 வரையிலான நபிமொழிகளின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மனிதனின் (ஈருலக) வெற்றி நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பதில் தான் இருக்கிறது.

(2) நபியவர்களின் வழிமுறையை (ப் பின்பற்றாமல்) தவிரந்து நடப்பது அவர்களுக்கு மாறுசெய்வதாகும். அவர்களுக்கு மாறு செய்வது நரகம் புக வழி வகுக்கும்.

(3) சுவனம் நுழைய யார் விரும்புகிறாரோ அவர் நபியவர்களைப் பின்பற்றுவது கடமையாகும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget