ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 16

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்காதீர்கள்

عَن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ" (أخرجه مسلم 282 , وللبخاري " لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي المَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ"



ஹதீஸின் பொருள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் (ஓடாமல்) தேங்கி நிற்கும் நீரில் (மூழ்கிக்) குளிக்க வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

ஆதாரம் : முஸ்லிம் : 282.

(புஹாரியின் அறிவிப்பில் : உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்)



ஹதீஸ் அறிவிப்பாளர்

அபூ ஹூரைரா (ரலி) அவர்களது முழுப் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு ஸக்ர் அத்தௌஸீ அல்யமானீ என்பதாகும். இவர்கள் 'ராவியதுல் இஸ்லாம்' என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்பட்டார்கள். தான் ஆடு மேய்க்கும் போது பூனைக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை வழமையாகிக் கொண்டதால் இவருக்கு 'அபூ ஹூரைரா' என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. 'கைபர்' போர் நடைபெற்ற ஹிஜ்ரி 7ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார்.

அன்றிலிருந்து 4 வருடங்கள் தொடர்ந்து நபிகளாருடனே இருந்தார்கள், நபியவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடனேயே இருந்து நபிமொழிகளைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் நபிகளாரைத் தொட்டும் அதிக நபிமொழிகளை மனனமிட்டு, 5374 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். இதன் காரணமாக நபித்தோழர்களில் மிகக் கூடுதலான நபிமொழிகளை அறிவித்தவர் என்ற பெயருக்கு சொந்தமானார்கள். மேலும் மதீனாவின் பிரபல சட்டக்கலை வல்லுனர்களில் ஒருவராகவும் திகழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி 57ம் ஆண்டு மதீனாவில் மரணித்து பகீஃவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.



ஹதீஸின் சாரம்சம்

நீர்த் தொட்டிகள், மக்கள் நீர் எடுக்கும் இடங்கள், நீர்த்தேக்கங்கள், நீர்த் தடாகங்கள் போன்ற நீர் ஓடாமல் தேங்கி நிற்கும் இடங்களில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இவ்விடங்களை அசுத்தப்படுத்தி மக்களை வெறுப்புக்குள்ளாக்காமல் இருப்பதற்காகவே இது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது போன்ற கழிவுப் பொருட்கள் நீரில் கலப்பதால் சமூகத்தில் கொடிய நோய்கள் பரவக் காரணமாகின்றன.

மேலும் அந்நீர் (ஆறு, கடல் போன்று) ஓடக்கூடியதாக இருந்தால் அதில் குளிப்பதிலோ, சிறுநீர் கழிப்பதிலோ ஆட்சேபனை கிடையாது. என்றாலும் அதில் சிறுநீர் கழிப்பதால் எவ்விதப் பயனுமில்லாததாலும், ஏனையோருக்கு சில சமயங்களில் இடையூறு ஏற்படலாம் என்பதாலும் அதனைத் தவிர்ப்பது நல்லது.



ஹதீஸின் படிப்பினைகள்

1. தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிப்பது ஹராமாகும். அதிலே மலம் கழிப்பது இன்னும் கடுமையாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரி. ஆனால் ஓடக்கூடிய நீரில் அது தடையில்லை. ஏனெனில் ஓடக்கூடிய நீரில் அசுத்தம் கலந்து அதன் நிறம், மணம், சுவை இம்மூன்றிலொன்று மாறினால்தான் அது அசுத்தமாகும்.

2. மக்களுக்குத் தீங்கிழைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

3. இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்தும் மார்க்கம் என்பதற்கு இந்நபிமொழியும் ஒரு சான்றாகும். தண்ணீர் மாசுபடும் விதத்தில் சிறு நீர்த்தேக்கங்களில் மூழ்கிக் குளிப்பதால் பிறர் சங்கடப்படுகின்றனர். அதனைத் தவிர்ந்து கொள்ளும்படி இந்நபிமொழி போதிக்கின்றது.



வினா இல - 16
 தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிப்பதன் இஸ்லாமிய சட்டம் என்ன ?




கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget