ஹாதியா! ஓர் அபலையின் வாழ்வுரிமைக் குரல்

வஸீம் ஹுஸைன்
மனித குலத்திற்கு ஏற்றதான வாழ்க்கை நெறியை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே நூறு வீதம் போதிப்பதை பார்க்கலாம். இஸ்லாமிய விழுமியங்களை அறிந்து இன்று மக்கள் சாரை சாரையாக தங்களை முஸ்லிமாக மாற்றி இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக கடைப்பிடிப்பதை காணக்கிடைக்கின்றது. இப்படி உலகில் பலரால் (பிற மதத்தவர்களால்) விரும்பி தம்மை இஸ்லாத்தின் பால் நுழைவிப்போரின் எண்ணிக்கையே அதிகம் என்பது தான் உலகை வியப்பிலார்த்தும் விடயமாகும்.

இப்படி சிறப்பியல் கொண்ட இஸ்லாத்தில் இணைபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். இதற்கு தக்க சான்றாக எமது நாளாந்த பத்திரிகைகளில் பெயர் மாற்றம் என்ற பகுதியினூடாக ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தல் வருதே போதுமானது. இப்படியான நிலையில் தூய இஸ்லாத்தை விட்டும் அற்ப காதலுக்காவும் சாதாரண உடலாசைக்காகவும் வேண்டி சில முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் மதமாறி பின்னர் சீரழிவதை பார்க்கின்றோம். இப்படியானவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை திறன்பட கற்று, அறிந்த பின்னர் தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்ட (அகீலா) ஹாதியா என்ற இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சகோதரி இன்று அனைவரது கண்களிலும் விழுந்த கந்தலாக மாறியிருப்பது நாம் அறிந்த விடயமாகும்.

யார் இந்த சகோதரி ஹாதியா?
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் அசோக மணியின் மகள் தான் சகோதரி அகிலா. 2011 ம் ஆண்டு மருத்துவ பீடத்தில் கற்பதற்காக சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கற்கலானார். பின்னர் கல்லூரியில் சக முஸ்லிம்களுடைய நடைமுறைகளை கண்காணித்து அதன் பால் ஈர்க்கப்பட்டு சுயமாகவே அவர் இஸ்லாத்திற்குள் நுழைகிறார். 

தன்னுடைய மகள் அகிலாவை கேரள மாநில பெருந்தல் மன்னாவை சேர்ந்த அபூபக்கர் என்பவரும் அவருடைய மகள்கள் ஜெசீனா மற்றும் பஸீனா ஆகியோரும் கடத்தி, கட்டாய மதம் மாற்றி , சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத்தரும்படியும் அகீலாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

2015 ஆகட்ஸ் முதல் 2016 வரை தான் பெற்றோர் வீட்டில் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு பேசும் உரிமை கூட அற்ற நிலையில் தடுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்ட பொம்மையாக வழிநாடாத்தப்பட்டுள்ளதாக ஹாதியா குறிப்பிடுகின்றார்.

இந்தியாவின் முன்னனி நாளிதழ்கள் பலவும் ஹாதியா சுயமாகத்தான் இஸ்லாத்தை ஏற்றார் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. ஹாதியாவின் தந்தை கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர், தாய் இந்து மதத்தை சார்ந்தவர். இதற்கிடையிலேயே தான், எனது பிறப்பு மதத்திலிருந்து புனித இஸ்லாத்தை எனது சுயவிருப்பத்தின் பெயரில் பின்பற்றுவதாக வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் வைத்து ஒப்புதல் அளித்தது மாத்திரமன்றி அதற்கான பதிவு ஒன்றையும் தன்னகத்தே வைத்துள்ளார். 

இந்நிலைiயில் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர் சுயமாகத்தான் இஸ்லாத்தை ஏற்றார் என்ற பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் வழக்கை தள்ளுபடி செய்கின்றனர். இதன் பின்னரான காலப்பகுதியிலேயே அகீலா என்ற பெயரை ஹாதியா என மாற்றுகின்றார். 

கடந்த 2016.12.19 அகீலாவிற்கும் கேரளாவை சேர்ந்த ஸபீன் ஜஹான் என்பவருக்கும் இடையில் திருமணம் நடக்கிறது. பின்னர் ஹாதியாவின் தந்தை மீண்டும் கேரளா நீதிமன்றில் தனது மகளை லவ் ஜிஹாத் மூலம் தீவிரவாதியாக மாற்றி சிரியாவிற்கு அனுப்ப முஸ்லிம்கள் செய்யும் சதி எனவும் தன் மகளை மீட்டுத் தரும் படியும் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகளான திரு. சுரேந்திர மோகன். திரு.ஆப்ரஹாம் மேத்தீவ் ஆகியோர் விசாரணைக்கு வந்த கணவன் மனைவிகளை பிரித்து வைத்தது மாத்திரமன்றி முஸ்லிம் சட்டத்தின் கீழ் விவாகமானதாக ஆவணம் இருக்கத்தக்க மேற்படி நீதிபதிகள் இவர்களை பிரித்து ஹாதியாவை தன் தந்தையுடன் அனுப்புமாறு விசாரணை நடாத்தி தீர்ப்பளித்தனர்.

பின்னர் மேஜரான ஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின்படி ஒரு மதத்தை தழுவ அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைக்கு மாறாகவும், இரண்டு பேர் மனம் விரும்பி செய்துகொண்ட திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸபீன் ஜஹான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறாக நீதிமன்றங்கள் செயற்பட்டு டாக்டர் ஹாதியாவிற்கு இழைத்துள்ள அநீதியை கண்டித்து மனித உரிமை அமைப்புகள் போராடி வருகிறது. 

24 வயதாகும் ஓர் பெண் தனது சுய விருப்பத்தின் பெயரில் திருமணம் செய்யவோ, இந்திய அரசியல் சாசனத்தின் பிரகாரம் மதமாற்றம் மேற்கொள்ளலாம் என்ற சட்டங்கள் சாதாரண மக்கள் மத்தியில் மத்திய அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத குற்றச்சாட்டின் வெளிப்பாடுகளை பல சமூக ஆர்வலர்கள் கண்டித்திருப்பது மனிதம் மடியவில்லை என்பதை காட்டுகின்றது.

குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்த சகோதரிகள் பலரும் ஹாதியாவிற்கான எனது குரல் என்ற தொனியில் ஆர்ப்பாட்டங்களும் சமூகவலைத்தளங்களில் ஆதரவாக குரலெழுப்புவதையும் காணலாம். 

தமுமுக கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருள்ளா அவர்களும் தனது கண்டனத்தை தெரிவித்தது மட்டுமல்லாது. போலியான சித்தரிப்பு மூலம் அரசியல் சானத்திற்கு அமைவான இச்செயற்பாட்டிற்கெதிரான முன்னெடுப்புக்களை மேற் கொள்பவர்களை சட்டத்தை பேணும்படி தனது கண்டன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்லூரி மாணவிகள் பலரும் வீதியில் இறங்கி ஹாதியாவிற்கு ஆதரவாக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் மாணவிகள் மாத்திரம் அல்லாது ஏனைய இந்து மத சகோதரிகளும் வீதிக்கிறங்கி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

வழக்கறிஞர் அஜிதா அவர்களும் இந்திய சாசனத்திற்கு ஏதுவான இச்சம்வத்தை வைத்து காவிகள் நடாத்தும் கபட நாடகத்தை கண்டித்து அறிக்கைவிட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் பரவலாக காணலாம். 

இந்துத்துவா அமைப்பினர் ஹவுன்ஸிலிங் என்ற பெயரில் துன்புறுத்தலை மேற்கொள்வதும் தான் வீட்டுக்காவலில் துன்புறுத்தப்படுவதாகவும். நான் கொலை செய்யப்படலாம் என்ற ஹாதியாவின் வீடியோ பதிவு இன்று சமூகவலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவுவதை காணலாம்.
மதச்சார்பற்ற தேசம் பாரத தேசம் என மார்பு தட்டுபவர்கள் ஹாதியா விடயத்தில் எங்கே போனீர்கள்.?

வலுக்கட்டாய அற்ப காதலுக்காக எத்தனையோ முஸ்லிம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தான் விரும்பிய மதத்தில் வாழ்கின்ற போது ஹாதியா மீது மட்டும் பாரத மாத்தே ஜே என்பது எந்த வகையில் நியாயம்?

மகளே! ரெஜினா என்னை வீட்டு போகாதே என்று நீதிமன்ற வாயிலில் நின்று ஒரு முஸ்லிம் தந்தை தனது மகள் மதம் மாறி காதலனோடு காமம் தேடிப் போன போது, அழுது புலம்பியது ஞாபகம் உள்ளதா? அப்போது இந்திய சட்டமும் இந்துத்துவாவின் ஹவுன்ஸிலிங்கும் எங்கே போனது?

ஒரு இனத்தை மாத்திரம் குறி வைத்து மேற்கொள்ளப்படும் இப்படியான இனச்சுத்திகரிப்பு இந்தியாவின் பகற்கனவாய் இருக்கும் வல்லரசு நாடு என்பது விஜயகாந்தின் படத்தில் மாத்திரமே நிகழும் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

பெண்களுக்கான விடுதலை, பெண்ணியம் பற்றி பேசும் பாரதி பிறந்த மண்ணில் பருவ வயதை அடைந்த ஒரு பெண்ணின் வாழ்வுரிமை நசுக்கப்படுவது கேவலமாக இருக்கின்றது. 

முஸ்லிமாக பிறந்ததால் இந்திய காவிகள் சிலர் முன்னெடுக்கும் சில காட்டுமிராண்டித்தனமாக செயலுக்கு நீதிதேவதை கண்மூடியிருப்பது எதிர்கால அரசியல் சானத்திற்கு கேள்விக்குறியாக அமையலாம்.

மத்திய அரசின் சில அற்ப வாக்கு வங்கிகளுக்காக முஸ்லிம்கள் நசுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஹாதியாவாக இருந்தாலும் காவேரியாக இருந்தாலும் அரச சட்டத்திற்கு உட்பட்டு செய்கின்ற போது அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்ககுவதென்பது மக்கள் இன்னும் இருளில் இருக்கின்றனர் என்பதையே காட்டுகின்றது.

ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....!!
நாடே பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹாதியா தம்முடைய கணவரின் பாதுகாப்பிலேயே இருப்பதாக கூறியுள்ளார்.

வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில்...

ஹாதியா வீட்டு காவலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஹாதியா தம்முடைய கல்வியை தொடரலாம் என்றும், ஹாதியாவுக்கான பாதுகாப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹாதியாவின் கல்லூரி முதல்வரே ஹாதியாவின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஹாதியாவை பார்க்க பெற்றோரோ கணவரோ வந்தால் அவர்களை கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழக அரசின் செலவில் படிப்பை மேற்கொள்கிறாயா என்ற நீதிபதியின் கேள்விக்கு தம்முடைய கல்விக்கான செலவை செய்ய கணவர் இருக்கும்போது தமிழக அரசின் கல்வி உதவி வேண்டாம் என்று கூறியுள்ளார்.

11 மாதங்களாக சட்டத்திற்கு புறம்பாக தந்தையின் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட ஹாதியாவுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதற்கட்ட மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது.

இறுதியாக அரசியல் சட்டத்திற்கு அமைவாக நடக்கும் ஹாதியாவிற்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும். ஹாதியாவிற்கான சுதந்திரத்தை பாரத சட்டம் நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி அவருடைய கணவனோடு வாழ்வதற்கான உரிமையை பெறுவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும். ஹாதியா செய்தது தவறு என்றால் மதம் மாறி சென்ற முஸ்லிம்கள் தொடர்பில் ஏன் நீதி மன்றங்கள் பராமுகமாக இருக்கின்றது போன்ற விடயங்களை நீதியரசர்கள் ஆராய்வதோடு, அது தொடர்பில் அதிகாரமுள்ளவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹாதியாவின் செயலை முஸ்லிம்கள் மாத்திரம் ஆதரிக்கவில்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஆதரிக்கின்ற நிலையில் வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் ஹாதியா நிரபராதி என்று முழங்கும் நேரத்தில் அதிகாரம் பொருந்திய நீதித்துறையும் பாதுகாப்பு துறையும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன் வரவேண்டும். நாளை விடியும் பொழுது ஓர் அபலையை வாழ வைக்கும் விடியலாக இருக்க வேண்டும். குரல்வளைகள் நசுக்கப்பட்டு ஓர் அப்பாவியின் மன வேதனைக்கு கருணையுள்ளம் கொண்ட மிருகமும், கல்லும் அசையும் போது, பண்பட்ட உள்ளம் நாளை தீர்பை எப்படி எழுதும்?? 

ஆவலுடன் இறைவனை பிரார்த்தித்தவனாக...
வஸீம் ஹுஸைன்




கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget