ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12

ஹதீஸ்களை பாதுகாப்பதில் ஸலபுகளின் பங்கு

ஹதீஸ் கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராயும் ஆய்வாளர்கள் அதனைப் பல கட்டங்களாக பிரிக்கின்றனர். அவற்றை கீழ்காணும் நான்கு காலகட்டங்களாக நோக்குகின்றனர்.

1. நபிகளாரின் காலம்

2. நபித் தோழர்களின் காலம்

3. தாபிஈன்களின் காலம்

4. ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு.

ஹதீஸ் என்பது நபிகளாருடைய காலத்துடன் தொடர்புபடுவதால் ஹதீஸ் கலையும் அக்காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனும் ஹதீஸும் கலந்து விடக்கூடாது என்பதால் ஆரம்பத்தில் அல்குர்ஆனைத் தவிர வேறு எதனையும் எழுதவேண்டாமென்று தடை செய்தார்கள். எனினும் இரு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற சில நபித் தோழர்களுக்கு ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதியளித்தார்கள். உதாரணமாக அலீ, அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) போன்றோரைக் குறிப்பிடலாம்.



நபி (ஸல்) அவர்களின் காலம்

இஸ்லாத்தின் மூலாதாரங்களில் குர்ஆனுக்கு அடுத்தபடியாக காணப்படப்கூடிய ஹதீஸை குர்ஆனைப் போலவே பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஸஹாபாக்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு ஸஹாபியும் தன்னால் இயன்ற முறையில் ஹதீஸ்களைப் பாதுகாத்தனர். அந்த வகையில் நபியவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் பிரதான மூன்று முறைகளில் பாதுகாக்கப்பட்டன.

01. மனனமிடல்

02. எழுதி வைத்தல்

03. செயல்படுத்தல்



01. மனனமிடல்

நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்கள் அவர்களது காலத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறந்த முறை மனனமிடலாகும். மனனம் செய்வதில் அரபிகளிடம் ஓர் அலாதியான திறமை காணப்பட்டது. இதற்காக நபியவர்கள் தனது தோழர்களை தூண்டிக் கொண்டேயிருந்தார்கள். 'எவர் எனது வார்த்தைகளை செவிமெடுத்து, அவற்றைப் மனனமிட்டுப் பாதுகாத்து ஏனையவர்களுக்கும் அவர் கேட்டவாறே அறிவிக்கின்றாரோ,





அவரை அல்லாஹ் ஒளிபெறச் செய்வானாக. ஏனென்றால் அவை யாருக்கு அறிவிக்கப்படுகின்றனவோ அவர் அறிவிப்பவரை விட சிலவேளை சிறப்பாக விளங்கலாம்.' (அபூதாவூத் : 3660, திர்மிதி : 2847, இப்னுமாஜா : 230)



02. எழுதி வைத்தல்

ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொகுக்கப்படவில்லை என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் காலாகாலமாக இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்கள் தான் ஹதீஸ்களை முதன் முதலாக ஒன்று திரட்டினார்கள் என்ற சில அறிஞர்களது கருத்தே இதற்கு காரணமாகும். ஆனால் நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்கள், தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்டதை வரலாற்றை பார்க்கின்ற போது எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் வஹி இறங்கிய ஆரம்பகாலத்தில் ஹதீஸ்களை எழுதவேண்டாம் எனக் கட்டளையிட்டிருந்தார்கள். 'என்னைத்தொட்டும் எந்த ஒன்றையும் எழுதவேண்டாம். எவராவது குர்ஆனைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை எழுதினால் அதனை அழிக் கட்டும்' என நபியவர்கள் கூறியதாக அபூஸஈதில் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 3004)

குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடக் கூடாது என்பதற்காகவும், குர்ஆன் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நபியவர்கள் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என தடைவிதித்தார்கள். ஆனால் இக்காரணங்கள் இல்லாமல் போகின்ற போது அவற்றை எழுத அனுமதித்தார்கள் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபித்தோழர்களில் என்னை விட ஹதீஸ் அதிகமாக அறிந்தவர் எவரும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர, அவர் எழுதுவார், நான் எழுதமாட்டேன். (ஆதாரம் - புஹாரி : 113)

நபியவர்கள் மக்கா வெற்றியின் போது செய்த பிரசங்கத்தை அபூஷாஹ் என்பவர் எழுதித்தரும்படி கேட்ட போது நபியவர்கள் 'அபூஷாஹ்விற்கு எழுதிக் கொடுங்கள்' எனக் கூறினார்கள் (அறிவிப்பவர் - அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம் - புஹாரி : 2434, முஸ்லிம் : 1355)

மேற்கண்ட இரு செய்திகளும் நபியவர்கள் பிற்காலத்தில் ஹதீஸ்களை எழுத அனுமதித்ததைக் காட்டுகின்றது.



03. செயல்படுத்தல்

நபிகளாரின் காலத்தில் நபித்தோழர்கள் தாம் கற்றுக்கொண்ட ஹதீஸ்களை செயற்படுத்தி வந்தனர். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை அவ்வாறே பின்பற்ற வேண்டுமென்ற உணர்வு அவர்களிடம் காணப்பட்டது. வணக்கங்கள், குடும்ப வாழ்கை, சமூக வாழ்கை என அனைத்திலும் ஸஹாபாக்களின் வாழ்வு ஸூன்னாவின் வழியிலேயே இருந்தது.



நபித்தோழர்களின் காலம்

அகீதாவைப் போதிப்பதிலும், இஸ்லாத்தை பரப்புவதிலும் ஸஹாபாக்கள் எந்த அளவு ஈடுபாடு காட்டினார்களோ அதேயளவு ஹதீஸ்களைத் தொகுக்கின்ற விடயத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

• ஹதீஸ்களை மனனம் செய்வதற்கும், மனனம் செய்த ஹதீஸ்களை உறுதிப்படுத்தவும் தமது மாணவர்களை ஏவக்கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.

• ஸஹாபாக்களில் சிலர் சிலருக்கு ஹதீஸ்களை எழுதி அனுப்பக்கூடியவர்களாக இருந்தார்கள். உஸைத் பின் ஹூழைர் (ரலி) அவர்கள் நபியவர்களின் சில ஹதீஸ்களை மர்வான் பின் ஹகம் என்பவருக்கு எழுதி அனுப்பியதை எமக்கு சான்றாக எடுக்கலாம். (அஹ்மத் : 17896)

• ஹதீஸ்களை எழுதும் படி தமது மாணவர்களுக்கு ஏவக்கூடியவர்களாக காணப்பட்டனர். அனஸ் இப்னு மாலிக் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) , உமர் இப்னு ஹத்தாப் (ரலி), அலீ (ரலி) போன்றோர் ஹதீஸ்களை எழுதுவதற்குத் தூண்டக் கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.

ஸஹாபாக்களுடைய காலத்தில் ஹதீஸ்கள் எழுதப்பட்டாலும் அவை தலைப்புக்கள், பாடங்கள் என்ற அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மனனம் செய்வதற்கும், அதனை மீட்டுவதற்குமே எழுதப்பட்டன.



தாபிஈன்கள் காலம்

ஸஹாபாக்களுடைய காலத்தைப் போன்றே தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆமிர் அஷ்ஷஃபி , ஹஸனுல் பஸரீ , ஸஈத் இப்னு முஸய்யப் , இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி போன்றவர்கள் ஹதீஸ்களை எழுதித் தொகுக்கக்கூடியவர்களாக காணப்பட்டார்கள்.

ஹதீஸ்கள்; ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்பட்டதை விட தாபிஈன்களின் காலத்தில் அதிகளவில் எழுதப்பட்டது. தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களை மனனம் செய்த ஸஹாபாக்கள் மற்றும் மூத்த தாபிஈன்களின் மரணங்கள் அதிகரித்தமை, மக்கள் மத்தியில் மனனம் செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சி, பித்அத்களும் பொய்களும் பரவியமை போன்ற காரணங்களால் இக்காலகட்டத்தில் ஹதீஸ்கள் அதிகளவில் எழுதப்பட்டன.

இக்காலத்தில் கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ் மற்றும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி ஆகிய இருவரும் ஹதீஸ்களைத் தொகுப்பதில் ஆற்றிய சேவை மகத்தானதாகும். இவர்களது காலத்திலேயே ஹதீஸ்கள் பரிபூரணமாக தொகுக்கப்படத் துவங்கின. இமாம் ஸுஹ்ரி அவர்கள் கூறுகிறார்கள் 'உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்கள் ஹதீஸ்களை ஒன்று திரட்டுமாறு எங்களுக்கு ஏவினார்கள். நாங்கள் ஏடு ஏடாக ஹதீஸ்களை எழுதி ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பினோம்'.



ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு

இந்நூற்றாண்டு இஸ்லாமிய கல்வியின் குறிப்பாக ஹதீஸ் கலையின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. ஹதீஸ்களைத் தேடி உலகின் பல பாகங்களுக்கும் அறிஞர்கள் பிரயாணம் செய்தமை இக்காலத்தில் காணப்பட்ட ஒர் சிறப்பம்சமாகும். மஸானீத், ஸிஹாஹ், ஸுனன் போன்ற பெயர்களில் இக்காலத்தில் ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன. குறிப்பாக 'ஸிஹாஹூஸ் ஸித்தா' அல்லது 'அல்குதுபுஸ்ஸித்தா' என்று அழைக்கப்படக்கூடிய புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா போன்ற முக்கியமான ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன.

ஹதீஸ்களை ஸஹீஹ், ழஈப் என தரம்பிரித்து கூறுகின்ற ஒரு போக்கு இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது எனலாம். ஏற்கனவே பிற்காலத்து தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களோடு ஸஹாபாக்களினதும், தாபிஈன்களினதும் மார்க்கத் தீர்ப்புக்கள் ஹதீஸ் கிரந்தங்களில் எழுதப்பட்டன. ஆனால் மூன்றாம் நூற்றாண்டில் அந்த முறை மாறி நபியவர்களின் ஹதீஸ்களை மாத்திரம் தொகுக்கின்ற முறை அறிமுகமானது.

இதுபோன்றே பின்னர் வந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்களும் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு பல்வேறு சேவைகளைப் புரிந்துள்ளனர்.



வினா இல - 12
 
ஹதீஸ்களை ஸஹீஹ் , லஈப் என தரம் பிரிக்கும் முறை ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு அறிமுகமானது ?

கருத்துரையிடுக...

Salam alaikum varahmathullahi vabarakathuhu Tayau seidu engalukku vina mattum snd pannuga link than varudu enda phone ukku kelvi varudu illa eppadi naanga ar8vadu kelvi engalukku phone la msg Mai send pannuga ok. Enga kitta normal phone than irukku ok salam

This my nos 0779933340/my bro 0754133308 ok

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget