நாளும் ஓர் நபி மொழி (ஹதீஸ் இல 12) Ahmed abbasi, Riyadhi. M.A





12- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبيُّ يُعْجِبُهُ التَّيَمُّنُ فِيْ تَـنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُوْرِهِ, وَفِيْ شَأْنِهِ كُلِّهِ. صحيح البخاري, رقم الحديث 168 , و صحيح مسلم, رقم الحديث 67- (268) , واللفظ للبخاري.


(12) 'நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்'.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் : புஹாரி : 168, முஸ்லிம் : 268 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

ஹதீஸ் அறிவிப்பாளர்:
 
உம்முல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தாய்) ஆஇஷா (ரலி) அவர்கள் (இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், அருமை நண்பருமான) அபூபக்கர் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வியாவார். நபியவர்கள் ஹிஜ்ரதுக்கு முன் இவர்களைத் திருமணம் செய்து, (ஹிஜ்ரதுக்குப் பின்) மதீனாவில் அன்னையாருக்கு 9 வயதிருக்கும் போது உறவுகொண்டார்கள். நபியவர்கள் மரணிக்கும் போது அன்னாருக்கு வயது 18 ஆகும். மக்களில் மிகச் சிறந்த சட்டவல்லுனராகவும், அறிவாளியாகவும், அழகான கருத்துள்ளவராகவும் திகழ்ந்தார்கள், மேலும் கொடை வழங்குவதில் முன்னுதாரணம் கூறப்படக்கூடியவராகவும் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) (அவர்களுடன் மிக நீண்ட காலங்கள் வாழ்ந்திருந்ததன் காரணமாக) அவர்களைத் தொட்டும் அதிக நபிமொழிகளை அறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை 2210 ஆகும்.
அன்னையவர்கள் ஹிஜ்ரி 57 அல்லது 58 ல் ரமழான் அல்லது ஷவ்வால் மாதம் 17ம் நாள் செவ்வாய்கிழமையன்று மதீனாவில் மரணித்து பகிஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களுடைய ஜனாஸாத்தொழுகையை (அவர்களுடைய வஸிய்யத்தின் பிரகாரம்) அபூ ஹுரைரா (ரலி) நடத்தினார்கள்.







ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
 
(1) நல்லவிடயங்கள் அனைத்திலும் வலதை முற்படுத்துவதை இந்நபிமொழி தூண்டுகிறது.
(2) அருவருக்கத்தக்க அனைத்துக் காரியங்களுக்கும் இடதைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
(3) வாழ்கையின் அனைத்துக் காரியங்களிலும் இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பற்றிப்பிடிப்பது உயரந்த குணமாகவும், நாகரீகமான பண்பாடுமாகும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget