நாளும் ஒரு நபி மொழி 04 'நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வது அவசியம்' || மொழியாக்கம் : Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

- 'நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வது அவசியம்' -
(4) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'யார் என் மீது ஒரு ஸலவாத் சொல்வாரோ அவருக்கு அல்லாஹ் பத்து ஸலவாத் சொல்வான்".
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் : 408

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) ஒரு முஸ்லிம் தனது அனைத்து நிலைகளிலும் நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வது அவசியமாகும். கூட்டாகச் சொல்லாமல் தனித்தனியே சொல்லிக்கொள்ள வேண்டும்.

(2) நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல், (நாம்) அன்னார் மீது வைத்துள்ள நேசத்திற்கும் கண்ணியத்திற்குமோர் அடயாளமாகும்.

(3) நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வதை அதிகப்படுத்துவது மனிதனுக்கு மகிழ்ச்சியும் இறையருளும் கிடைக்கக் காரணமாகின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது நபித்தோழர்களுக்கு கற்றுக் கொடுத்த பிரகாரமே ஸலவாத் சொல்ல வேண்டும். அது பின்வருமாறு :

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்)

பொருள்: இறைவா! இப்ராஹீம் அவர்ளையும் அவர்களின் குடும்பத்தாரையும் நீ கண்ணியப்படுத்தியதைப்போல்; முஹம்மதையும் அவர் குடும்பத்தாரையும் கண்ணியப்பத்துவாயாக. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். (புஹாரி : 3370, முஸ்லிம் : 406. இவ்வார்தை புஹாரியில் இருந்து)

(4) நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்வதென்பது அவன் நபியவர்களை கண்ணியப்படுத்துவதும் புகழ்வதுமாகும். 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்" என்பதன் விளக்கம் : இறைவா! நபியவர்களை ஈருலகிலும் அவருடைய தகுதிக்கேற்ப கண்ணியப்படுத்துவாயாக.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget