நீதித் துறையில் ஸாஜிதீன், நிம்றான் ஆகியோர் சிறப்பு டிப்ளோமா பூர்த்தி!

- வஸீம் ஹூஸைன் -

எமது அல் இமாம் முஹம்மத் இப்னு ஸூஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ துறையில் கலைமானி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஸாஜிதீன் (ஸஹ்வி) நிம்றான் (ஷாபிஇ) ஆகியோர் நீதித்துறைக் கற்கையில் சிறப்பு டிப்ளோமா சான்றிதழ் பெற்றுள்ளனர்.

நீதி கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் ஏற்பாட்டில் எமது பல்கலைக்கழத்தில் நடைபெற்ற இக் கற்கை நெறி மூன்று மாதங்களை கொண்டதாகும். ஸஊதி அரேபியாவின் தலைசிறந்த நீதிபதிகளால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக கலாநிதி ஹாலித் இப்னு அப்துல் அஸீஸ் அஸ்ஸஈத், கலாநிதி ஹாலித் இப்னு உமர் அல் முர்ஸித், கலாநிதி முஹம்மத் இப்னு அப்துல் அஸீஸ் அல்பாயிஸ், கலாநிதி நாயிப் இப்னு அஹ்மத் அல்அஹ்மத், கலாநிதி முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்ஈஸா, கலாநிதி இஸ்மாயில் அல்ஜூரைவி ஆகிய நீதிபதிகள் மாணவர்களுக்கு சிறப்பு விரிவுரையினை வழங்கியிருந்தனர்.

சுமார் 35 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில்

01. நீதித்துறையின் சட்ட ஒழுங்குகள்

02. தீர்ப்பு வழங்கும் முறை

03. மன்னிப்பு வழங்குவதன் முறையும், உள்ளடக்கமும்

04. ஆதாரங்களை பகுப்பாய்வு செய்தல்

05. நீதித்துறையின் வகையும் விளக்கமும்

06. நீதித்துறையின் நடைமுறைகளும் நிர்வாகமும்

07. நீதிபதிகளுக்கான விதிகளும், அடிப்படைகளும்

08. சட்ட அறிவியல் ஓர் அறிமுகம்

ஆகிய பிரதான தலைப்புக்களில் விரிவுரையாற்றப்பட்டன. 












கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget