|சவூதிக்கான இலங்கைத் தூதுவருடன் ஓர் சந்திப்பு |

- Muhammad Abu Khalidh -
2018/10/20 திகதி சனிக்கிழமை சவூதிக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ அஸ்மி தாஸிம் அவர்களுக்கும், அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களுக்குமிடையிலான ஓர் சினேக பூர்வ சந்திப்பு இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். 

இச்சந்திப்பில் அல் - இமாம் பல்கழலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்திற்கும் சவூதிற்கான இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான தொடர்புகள் பற்றி அலசியதுடன் எதிர் காலத்தில் எவ்வாறு தம்மாலான சமூக சேவைகளை மேற்கொள்ளலாம் எனவும் கலந்துரையாடப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து மூன்று மணித்தியால கலந்துரையாடலின் பின்னர் தூதுவர் கௌரவ அஸ்மி தாஸிம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் உணவுடன் இச்சந்திப்பு இனிதே முடிவுற்றது.

இச்சந்திப்பை ஏற்பாடு செய்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ அஸ்மி தாஸிம் அவர்களுக்கும் மற்றும் அவர்களுடன் சேர்ந்து அல் இமாம் -பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தற்போது சவூதிக்கான இலங்கைத் தூதுவரலாயத்தில் பணி புரியும் கௌரவ மௌலவி ஷாஹுல் ஹமீத் (கபூரி, ரியாதி) அவர்களுக்கும் அல்-இமாம் பல்கழலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget