ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 01

(உங்கள் கவனத்திற்கு! எமது இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டி நூலின் முதற்பாகத்தில் சில தவறுகள் கடந்த முறை இடம் பெற்றிருந்தது. அதனை பூரணமாக திருத்தம் செய்து இம்முறை ரவ்ழது ரமழான் 2018 இல் பிரசுரம் செய்கிறோம்.)


அகீதா என்பதன் பொருள்

அகீதா என்றால் அல்லாஹ்வையும் அவனது மலக்குமார்களையும், வேதங்களையும், ரஸூல்மார்களையும், மறுமை நாளையும், நன்மை,தீமை என்பன அவனின் விதிப்படியே நடக்கும் என்பதையும் நம்பிக்கை கொள்வதை குறிக்கின்றது.

இதை சுருக்கமாகக் கூறுவதானால் இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த அம்சங்களை எவ்வித சந்தேகங்களும் இன்றி, அல்லாஹ்வும், அவனது தூதரும் எமக்கு அறிவித்துத்தந்த பிரகாரம் உண்மைப்படுத்தி, உறுதியாய் நம்பிக்கை கொள்வதாகும்.

நபித்துவத்திற்கு முன் அரேபிய மக்களின் நிலை

இஸ்லாத்தின் வருகைக்கு முன் அரேபிய தீபகற்பம் அறியாமையிலும் இணைவைப்பிலும் மூழ்கியிருந்தது. இஸ்லாமிய வருகையைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்தவர்கள் கண்ணியமிக்கவர்களாகவும், சமூகத்தின் சிறந்த தலைவர்களாகவும், இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை தமது வாழ்க்கை நெறியாக எடுத்து நடந்தவர்களாகவும் விளங்கியதோடு, அரேபிய தீபகற்பத்தை சிறந்த நிலைக்குக் கொண்டுவந்தனர்.

அரேபிய தீபகற்பம் இஸ்லாமிய வருகைக்கு முன்பு தன்னகத்தே கொண்டிருந்த சில தீய விடயங்கள்:

1. அரேபியர்கள் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கும், அல்லாஹ்வுக்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ் கூறுகிறான், 'அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை. (என்று கூறுகின்றனர்)'. (அல்குர்ஆன் - 39 : 03)

காலப்போக்கில் இவ்இடைத்தரகர்களை சக்திவாய்ந்த கடவுள்கள் என எண்ணத் துவங்கிவிட்டனர். தாம் வணங்குபவைகள் தீமையைத் தடுக்கவும், நன்மையை ஏற்படுத்தவும் சக்தி பெற்றது என நம்பினர். அவர்களை கடவுள்களாக ஏற்று தமது வழிபாடுகளை அவர்களுக்காகவே செய்ய ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஊருக்கும் ஓர் கடவுள் என ஏற்படுத்தினர். அதில் மக்கா நகரத்திற்கு 'ஹூபல்' என்ற சிலையும், தாயிப் நகரத்திற்கு 'லாத்' என்ற சிலையும் மிகவும் பிரபல்யமான கடவுள்களாகக் காணப்பட்டன.



அவ்வாறே ஒவ்வொரு வீட்டிற்கும் கடவுள்கள் வர ஆரம்பித்தன. இதன் காரணமாக சிலை வியாபாரம் அக்காலத்தில் பிரசித்து பெற்று விளங்கியது. புனித கஃபா ஆலயம் அக்காலத்தில் ஊர், கோத்திரம் என்ற பாகப்பிரிவினைக்கு அமைவாக 360 சிலைகளைக் கொண்டு நிரம்பி வழிந்தது.



2. சகுனம் பார்த்தலும், அவநம்பிக்கை வைத்தலும்

திருமணம் முடித்தல், பிரயாணம் செய்தல், வியாபாரம் செய்தல் போன்ற அனைத்துக் காரியங்களுக்கும் சகுனம் பார்ப்பவர்களாக இருந்து வந்தனர்.

இதற்காக ஓர் பறவையை எடுத்து, வானில் பறக்க விடுவார்கள். அது வலது திசையை நோக்கிப் பறந்தால் அச்செயலில் நன்மைகள் அதிகம் இருப்பதாக நினைத்து, அக்காரியத்தைத் தொடர்வார்கள்.

அப்பறவை இடது பக்கம் பறந்தால் அச்செயலில் ஏதோ தீமை ஏற்பட இருப்பதாக நினைத்து அக்காரியத்தை கைவிட்டு விடுவார்கள். அதே போல் ஆந்தையின் சத்தத்தை கேட்டாலோ, காகத்தைக் கண்டாலோ அன்றைய தினம் தமக்கு ஏதோ ஓர் தீங்கு நடைபெறப்போகிறது என எண்ணி, வருத்தப்படுவார்கள். அவ்வாறே தமக்கு எவ்வித வெற்றியும் கிட்டாது என எண்ணி ஸபர் மாதத்தை அபசகுணம் நிறைந்த மாதமாகவே கருதி வந்துள்ளனர். இம்மாதத்தில் அவர்கள் எவ்வித நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்கள் தான் புனித இஸ்லாம் இப்பூமிக்கு வந்ததன் பின்னர் தலை சிறந்த அறிஞர்களாகவும், இஸ்லாத்திற்காக தமது உயிர்களை தியாகம் செய்தவர்களாகவும், இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் தம்மை மும்முரமாக ஈடுபடுத்தியவர்களாகவும் இருந்தார்கள். மறுமையில் நமக்கு முன்னர் சுவர்க்கம் நுழையக் கூடியவர்களாக மாறியுள்ளனர் என்றால் அவர்களை இப்படி மாற்றிய பெருமை இஸ்லாத்தையே சாரும்.





வினா இல - 01
 இஸ்லாமிய வருகைக்கு முன் அரேபிய தீபகற்பத்தில் காணப்பட்ட தீய விடயம் ஒன்றைக் குறிப்பிடுக?

கருத்துரையிடுக...

மக்கள் மார்க்கத்தை கற்க வேண்டும் என்ற நோக்கில் இப் போட்டியினை பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பித்து செய்து வருகின்றோம். தயவு செய்து விடைகளை பின்னோட்டமாக இட வேண்டாம்.

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget