ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –ஹதீஸ் , நாள் 21)



பாடம் 05
5.1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: ((إنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ - وَفِي رِوَايَةٍ: بِالنِّيَّةِ - وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى , فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إلَى اللَّهِ وَرَسُولِهِ , فَهِجْرَتُهُ إلَى اللَّهِ وَرَسُولِهِ , وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا , فَهِجْرَتُهُ إلَى مَا هَاجَرَ إلَيْهِ)) . أخرجه البخاري ومسلم .
பொருள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் எவருடைய ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந் தால் அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கமாக இருந்தால் அவருடைய ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது""
அறிவிப்பவர் : உமர் (ரலி).
ஆதாரம் : புஹாரி : 54, முஸ்லிம் : 1907 (இவ்வார்தை புஹாரியில் இருந்து பெறப் பட்டுள்ளது)
5.1.1 ஹதீஸ் அறிவிப்பாளர்:
அபூ ஹப்ஸ்’ என்ற புனைப்பெயருடனும், ‘அல்பாரூக்’ என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்பட்ட உமர் பின் கத்தாப் (ரலி) இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலீபா, இவரின் தாயாரின் பெயர் ஹன்தமாஃ பின்து ஹாஷிம் அல்மஃஸூமிய்யா. யானை வருடம் 13ம் ஆண்டு பிறந்தார்கள். ஜாஹிலிய்யாக் காலத்தில் குரைஷிகளின் அரசியல் தூதுவராக செயல்பட்டார்கள். நுபுவ்வத்தின் பின் 6ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார், அவரின் வருகை இஸ்லாத்திற்கே வெற்றியாக அமைந்தது. மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து நபிகளாருடன் அனைத்து  யுத்தங்களிலும் கலந்து கொண்டார். அல்குர்ஆன் அவரின் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாத பல சந்தர்ப்பங்களில் இறங்கியது. நபியவர்களைத் தொட்டும் 537 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். ஹஜ்ரி 13ம் ஆண்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது மரணத் தருவாயில் இஸ்லாமிய உம்மத்தின் அடுத்த கலீபாவாக இவரை நியமித்தார். பல நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கினார்கள். ஹிஜ்ரி நாட்காட்டியையும் அவரே உருவாக்கினார்கள். மக்களிடையே நீதமான ஆட்சி நடத்தினார்கள். ஹிஜ்ரி 23ம் ஆண்டு பஜ்ருத் தொழுகையில் வைத்து அபூலுஃலுஆ என்ற நெருப்பு வணங்கியினால் கொலை செய்யப்பட்டு அன்னை ஆயிஷாவின் அறையில் நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவருடைய ஆட்சிக்காலம் 10 வருடங்களும் 6 மாதங்களுமாகும்.
5.2. சாராம்சம்:
இந்நபிமொழி இஸ்லாத்தின் மகத்தான அடிப்படைகளுள் ஓர் அடிப்படையாகவும், முக்கியமான நபிமொழியாகவும் உள்ளது. ஒரு நற்செயல் ஏற்றுக் கொள்ளப்படுவதா அல்லது மறுக்கப்படுவதா? அதற்கான கூலியின் அதிகமா அல்லது குறைவா என்பதற்கான சரியான அளவுகோல் இந்த நபிமொழியாகும். அமல்களெல்லாம் தங்கியிருப்பது எண்ணங்களில்தான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வெண்ணம் நல்லதாக, அல்லாஹ்வுக்கு என்றிருந்தால் அச்செயல் ஏற்கப்படும். அவ்வாறில்லை யெனில் தட்டப்படும். ஏனெனில் அல்லாஹ் அவனுக்கு நிகரானவர்களை விட்டும் தேவையற்றவன். பின்பு நபியவர்கள் ஹிஜ்ரத்தின் மூலம் இதற்கு உதாரணம் காட்டுகின்றார்கள். அல்லாஹ்வின் நற்கூலியையும், நபியின் நெருக்கத்தையும் நாடி, மார்க்கத்தைக் கற்கும் நோக்கில் அந்நிய பிரதேசத்திலிருந்து இஸ்லாமியப் பிரதேசத் திற்கு யார் ஊர்துறந்து செல்கிறாரோ அவருடைய அப்பயணம் இறைபாதையிலாக மாறிவிடும். அதற்காக அல்லாஹ் கூலி வழங்குவான். யாருடைய நோக்கம் உலகாதாயங்களைப் பெறுவதாக இருக்குமோ அவருடைய அப்பயணத்திற்கு எவ்வித நற்கூலியும் கிடைக்காது. அதுவே பாவச்செயலுக்காக இருந்தால் அதற்கான தண்டனைதான் அவருக்குக் கிடைக்கும்.
5.3. படிப்பினைகள்:
1. அனைத்து செயல்களும், அவை சரியானதா, தவறானதா? பூரணமானதா, குறைவானதா? நன்மையா, தீமையா? போன்ற அனைத்தும் எண்ணங்களிலேயே தங்கியிருக்கின்றது. யார் தனது செயற்கள் மூலம் முகஸ்துதியை நாடுகிறாரோ அவர் பாவியாவார்.
2. நிய்யத் ஒவ்வோர் அமலுக்கும் அடிப்படை நிபந்தனையாகும். எனினும் அதை வரவழைப்பதில் சிரமம் எடுத்துக் கொள்ள அவசியமில்லை. அது அவருடைய வணக்கத்தையே பாலாக்கிவிடும். ஒன்றை செய்வதாக மனதால் எண்ணுவதே நிய்யத்து தான்.
3. நிய்யத் வர வெண்டிய இடம் உள்ளமாகும். அதனை வாயினால் மொழிவது பித்அத்தாகும்.
4.            உலகாதாயங்களுக்காகவோ, மக்களின் பெயர், புகழுக்காகவோ அமல் செய்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். அந்நோக்கங்களில் ஏதாவதொன்றிருந்தால் அது அவ்வணக்கத்தை வீணடித்திவிடும்.
5.            உள்ளத்துடன் சம்பந்தப்படும் அமல்களில் கரிசணையெடுத்து கண்காணித்து வருவது அவசியமாகும்.
காபிர்களின் பிரதேசத்திலிருந்து இஸ்லாமியப் பிரதேசத்திற்கு ஊர்த்துறந்து செல்வதானது, அது அல்லாஹ்வுக்கென்றிருந்தால் அதுவே சிறந்த வணக்கங்களில் ஒன்றாக மாறிவிடுகின்றது.

கேள்வி இல21
ஹிஜ்ரி நாட்காட்டியைஉருவாக்கியவர் யார்? அவர்எத்தனையாம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார்? அவரை கொலைசெய்தவர் யார்?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget